Thursday 31 July 2008

One Flew Over the Cuckoo's Nest - விமர்சனம்


One Flew Over the Cuckoo's Nest :
இந்த படம் என்னோட ஆபீஸ் இல்ல ஒரு வெள்ளைக்கார நண்பரிடம் என் ரூம் மேட் அவரோட ஆல் டைம் பிடிச்ச படம் இன்னு சொல்ல கேட்டு வாங்கி வந்து பார்த்தது. படம் ரிலீஸ் ஆனது 1976 வருடம் . 4 or 5 oscar அவார்ட் கூட வாங்கி இருக்கும் போல. படத்துல பெருசா ஒருத்தனையும் கீரோ வா காட்ல. ஒரு வேலை கீரோ நா இப்படீ தான் அந்த காலத்து இருந்ததோ இன்னும தெரியல.

Jack Nicholson தான் அந்த ஹீரோ . ஒன்னும் பெருசா அலாடாத நடிப்பு . நல்ல அறை லூசு ஆவே நடிச்சு இருக்கிறான் .

Louise Fletcher ஹீரோஇன் நல்ல நடிப்பு ஒரு கண்டிப்பான நர்ஸ் ஆ நல்லாவே நடிச்சு இருக்குது. எப்பவுமே நம்ம ஹீரோவும் கீரோயினயும் லவ் பண்ணி கலயாணம் பண்ணி சந்தோசமா இருப்பாங்க அப்படீங்கற நெனைப்புல படம் பார்த்த ஒண்ணுமே இல்லா . அவங்க ரெண்டு பேருக்கும் தனி தனி ரோல் அவலூதான் . நார்மலா ஆங்கில படத்துல வர்ற லிப்ஸ் கிச்ச்ஸ் காட்சி கூட இல்ல. ஒரு மண்ணும் இல்ல அப்படீன்னா பார்க்கணுமா இன்னு கூட தோனுது .
படம் ஒரு நல்ல எதார்த்தமான து அப்படீன்னு சொல்லலாம் . எங்கயும் கீரோ ஒரு சாதாரண மனுஷ பணறதுக்கு மேல ஒன்னும் பண்ல . ஆனா அது வந்த வருஷம் நாம்ம ஊருல எம்.கிய் .ஆர் போன்றவர்கள் சினிமா வா வெச்சு தமிழ் உலகத ஏமாத்தி வாழ்ந்த காலம் . அப்ப்ருந்து இன்ன வரை தமிழ் சினிமா மட்டும் வளருது தமிழன் அப்படியே தான் இருக்கிறான் . திருந்தாத ஜென்மங்கள் வாழும் நாடு தமிழ்நாடு. நான் என்னோட தமிழ் ஜென்ம விசாரணை ஈ விட்டு படத்துக்கு வரேன் .

Wednesday 30 July 2008

Genealogy Theory


This is what the subject theory explained by you and by mom.
Hope this happens everywhere!

 
A humorous comment on the creation debate.

Genealogy

A little girl asked her mother, 'How did the human race appear?'

The mother answered, 'God made Adam and Eve and they had children and so was
all mankind made.'

Two days later the girl asked her father the same question. The father
answered, 'Many years ago there were monkeys from which the human race
evolved.'

The confused girl returned to her mother and said, 'Mom, how is it possible
that you told me the human race was created by God, and Dad said they
developed from monkeys?'

The mother answered, 'Well, dear, it's actually very simple. I told you
about my side of the family and your father told you about his.'


 
 

Tuesday 29 July 2008

கரும்புத் தீவின் இரும்புத் தலைவன்! பிடல்காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில், 'அகில உலக அண்ணாத்த' அமெரிக்காவின் காலடியில், துரும்பாகத் தத்தளித்துக்கொண்டு இருக்கும் தீவு கியூபா. அதன் இரும்புத் தலைவர் பிடல்காஸ்ட்ரோதான், கடந்த 40 வருடங்களாக அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி! இராக், ஆப்கானிஸ்தான்களில் வெள்ளை மாளிகை ரிமோட் மூலமே வன்முறையைத் தூண்டும் அமெரிக்காவால், கைக்கெட்டும் தொலைவில் உள்ள கியூபாவில் சுண்டு விரலைக்கூடச் சுழற்ற முடியவில்லை. காரணம், காஸ்ட்ரோ! 47 வருடங்களாக கியூபாவின் ஜனாதிபதியாக இருக்கும் காஸ்ட்ரோவுக்கு எதிராக, ஒன்பது அமெரிக்க ஜனாதிபதிகள் போராடித் தோற்றிருக்கிறார்கள்.அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இதுவரை 638 முறை காஸ்ட்ரோவைக் கொல்வதற்கு ஆள் அம்புகளை ஏவி, அலுத்துப்போய் ஓய்ந்துவிட்டது. உடல்நிலை ஒத்துழைக்காததால், அரசு நிர்வாகத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகக் கடந்த வாரம் அறிவித்துள்ளார் காஸ்ட்ரோ. அமெரிக்க அரசு வெடி வெடித்துக் கொண்டாடாத குறைதான்!உலகமே கொண்டாடும் புரட்சி நாயகன் சே குவேரா, தன் தலைவனாகக் கொண்டாடிய காஸ்ட்ரோ, ஒரு 'நல்ல சர்வாதிகாரி'. பொதுவாக உலகப் புரட்சியாளர்களை வார்த்தெடுக்கும் வறுமைச் சூழல் காஸ்ட்ரோவுக்கு வாய்க்கவில்லை. செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவருக்கு, வாழ்க்கையின் சோகங்களைப் பற்றிய எந்த அறிமுகமும் இளம்வயதில் இல்லை. பாடிஸ்டாவின் சர்வ நாச அதிகாரப் பிடியில் கியூபா சிக்கித் தவித்துக்கொண்டு இருந்த சமயத்தில், கல்லூரி மாணவர் இயக்கங்களில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார் காஸ்ட்ரோ. தன் நண்பர்கள் வறுமையில் வாடித் தவிப்பதைக் கண்கூடாகக் கண்டார். அதன் பிறகுதான் காஸ்ட்ரோவின் கால்கள் மெள்ள மெள்ள புரட்சிப் பாதைக்குத் திரும்பின. காஸ்ட்ரோவை பாடிஸ்டா ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தினாலும், பின்னர் அவரது வேகத்தைக் கண்டு பயந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முனைந்தார். உத்வேகமில்லாத ஆயிரக்கணக்கான 'ஊழியர்'களைக்கொண்ட பாடிஸ்டாவின் ராணுவத்தை, வெறும் 135 வீரியமான வீரர்களைக்கொண்டு எதிர்த்துப் போராடினார் காஸ்ட்ரோ. இடையில் ஒரு முறை கைதான காஸ்ட்ரோவுக்கு 15 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்றக் கூண்டில், பாடிஸ்டாவுக்கு எதிராகக் கர்ஜித்தார் காஸ்ட்ரோ! அந்த உரை, நாட்டு மக்களின் உணர்ச்சிகளை உசுப்பேற்ற, காஸ்ட்ரோவுக்காக ஆதரவுக் குரல்கள் ஆர்ப்பரித்தன. சிறைத் தண்டனையை ரத்து செய்து, காஸ்ட்ரோவை நாடு கடத்தினார் பாடிஸ்டா. மெக்ஸிகோ சென்ற காஸ்ட்ரோவுடன் இணைந்துகொண்டார் சே குவேரா. காஸ்ட்ரோவின் கம்யூனிஸ காந்தமும், சே குவேராவின் கெரில்லா போர்த் திறமையும் ஒருவரையருவர் ஈர்த்து, இணைத்தன. 1956ல் 'ஜூலை 26 இயக்கம்' என்ற பெயரில் 82 வீரர்களைத் திரட்டி, மீண்டும் பாடிஸ்டா ராணுவத்தைத் தாக்கி, ரத்த மயமாகச் சிதைத்தார் காஸ்ட்ரோ. மெதுமெதுவாக கியூபாவுக்குள் ஊடுருவி, தன்னைப் போல் புரட்சிகர எண்ணமுள்ள இளைஞர்களை இணைத்துக்கொண்டார். 1959ல் பாடிஸ்டாவிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ, அன்று முதல் இன்று வரை கியூபாவின் கிங்! கியூபாவின் வளங்களை வசப்படுத்துவதற்காக பாடிஸ்டாவை ஊட்டமுடன் ஊக்கப்படுத்திய அமெரிக்காவைக் கண்டால், ஆரம்பத்திலிருந்தே காஸ்ட்ரோவுக்கு எரிச்சல்தான். 'கரைச்சல் பண்ணுவானோ' என்ற சந்தேகத்துடனேயே தன் நே(மோ)சக் கரத்தை அமெரிக்கா நீட்ட, எதிர்பார்த்தது போலவே எடக்கு பண்ண ஆரம்பித்தார் காஸ்ட்ரோ. அள்ள அள்ளக் குறையாத கியூபாவின் சர்க்கரையை, சல்லிசு விலையில் இனி அமெரிக்கா அள்ளிச் செல்ல முடியாது என்று அறிவித்தார். பதிலுக்கு கியூபாவில் இருக்கும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. அந்தச் சமயம் வலுவான வல்லரசாக இருந்த சோவியத் யூனியன், காஸ்ட்ரோவுக்குக் கை கொடுத்தது. கம்யூனிசமும் அமெரிக்க எதிர்ப்பும் இருவரையும் இணைத்தன. தனது எல்லையில் ரஷ்ய நிழல் படரவும், அரண்டு போன அமெரிக்கா, கியூபாவிடம் கொடுத்திருந்த 70 லட்சம் டன் சர்க்கரை இறக்குமதியை ரத்து செய்தது. கியூபாவின் பொருளாதாரத்தைப் போட்டுத் தாக்குவது அமெரிக்காவின் திட்டம். ஆனால், அசரவில்லை காஸ்ட்ரோ! கியூபாவிலிருந்த அமெரிக்காவின் 850 மில்லியன் டாலர் சொத்துக்களை அரசுடைமையாக்கி, அதிர்ச்சி அணுகுண்டை வீசினார். 'போட்டுத்தள்ள வேண்டியது பொருளாதாரத்தை அல்ல; காஸ்ட்ரோவைத்தான்!' என்று அமெரிக்கா தீர்மானித்தது அப்போதுதான்! 'ஹவான்னா சுருட்டு'ப் பிரியர் காஸ்ட்ரோ. அவர் பிடிக்கும் சுருட்டில் வெடிகுண்டு செட் செய்து பார்த்தார்கள். பலிக்கவில்லை. அவரைக் கொல்ல 1,400 பேருக்கு ஆயுதம் கொடுத்து அனுப்பிப் பார்த்தார்கள். நடக்கவில்லை. அவர் அணியும் 'ஸ்கூபா டைவிங் சூட்'டில் கொடிய நோய்க் கிருமிகளைத் தெளித்துப் பார்த்தார்கள். உணவுகளிலும், மாத்திரைகளிலும் விஷத்தைக் கலக்க முயன்றார்கள். காஸ்ட்ரோவின் தாடியில் உள்ள ஒற்றை முடியைக்கூடப் பொசுக்க முடியவில்லை அமெரிக்காவால்! காஸ்ட்ரோவின் முன்னாள் காதலியான மரிட்டா லோரென்ஸ், மீண்டும் காஸ்ட்ரோவைச் சந்தித்து, “நம் சந்தோஷத்தை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டாடலாம்'' என்றாள். அது விஷ ஐஸ்க்ரீம்! “ஏன் அவ்வளவு கஷ்டப்படுகிறாய்? நீ என்னைத் தாராளமாகச் சுட்டே கொன்றுவிடலாம்!” என்று சிரித்துக்கொண்டே அவளிடம் தன் துப்பாக்கியை நீட்டினார் காஸ்ட்ரோ. அவ்வளவுதான்... விதிர்விதிர்த்து, வெடவெடத்து காஸ்ட்ரோவின் காலடியில் சரண்டரானார் மரிட்டா. அமெரிக்காவின் இப்படியான கொலை முயற்சிகளை அடிப்படையாக வைத்து உருவான, 'காஸ்ட்ரோவைக் கொல்ல 638 வழிகள்' என்ற குறும்படம் படுபிரபலம். ஜனநாயகத்தை நசுக்குகிறார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும், காஸ்ட்ரோவின் ஆட்சியில் கியூபாவில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகள் எல்லாம் பக்கா! காஸ்ட்ரோ பெயரில் கியூபாவில் வீதியோ, சிலையோ... ஏன், ஒரு கட்அவுட்கூடக் கிடையாது. உடல் நிலை மோசமானதால் காஸ்ட்ரோ முழு ஓய்வு எடுப்பார் என்ற செய்தி வெளியானதும், 'அந்த நல்ல கடவுளுக்கு நன்றி! விரைவில் அவரை உலகத்திலிருந்து நீக்கிவிடுவார்!' என்று நாகூசாமல் சொன்னார், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். 'புஷ் நம்பும் அதே கடவுள்தான் என்னை 638 முறையும் காப்பாற்றியிருக்கிறார் என்பதை புஷ் மறந்துவிட வேண்டாம்!' என்று பதில் சொல்லியிருக்கிறார் பிடல் காஸ்ட்ரோ!தற்போது கியூபாவின் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் காஸ்ட்ரோவின் தம்பி ரால் காஸ்ட்ரோ, ஆரம்ப காலம் முதல் அண்ணனுக்குத் தோள் கொடுத்த தோழன்.''82 வீரர்களோடு எனது முதல் புரட்சியை ஆரம்பித்தேன். இப்போதென்றால் எனக்கு 10 அல்லது 15 வீரர்கள் போதும்! நீங்கள் எத்தனை சின்னவர்கள் என்பதல்ல விஷயம். உங்கள் அபார நம்பிக்கையும், நடவடிக்கையும்தான் உங்கள் சக்தியைத்தீர்மானிக்கும்!'' இதுதான் உலகத்துக்கு காஸ்ட்ரோவின் செய்தி!நன்றி விகடன்

காப்பி அண்ட் paste

நேரம்

அலுவலகத்தில் என்ன செய்வது என்று யோசிக்கும் போது கவிதை எழுதி கிழிக்கலாம் என்று தோநியது .உடனே வலையில் எழுதினேன் என்ன எழுவது இன்னு வெளங்கலை.

காப்பி அடித்து அடித்து பழகினதால எதாவது காப்பி பண்ணலாம் இன்னு வலையில் தேடினேன். ஒன்னும் உருப்படியா தேரலை .

என்ன தான் பண்றது இன்னு தெரியாம இந்த பிலாக் ஆரம்பிச்சேன் . நேரிய கட் அண்ட் பேஸ்ட் வேலை தான் செய்துகிட்டு இருகேஅன் . எனக்கு பிடிச்ச பிலாக் எல்லாம் போடு போர் அடிக்கும் பூத்து அதை படிக்கலாம் இன்னு முடிவு பணினேன் . எப்படியும் ஒரு நல்ல கட்டுரை எழுதனும் இன்னு காலேண்டர் இல்ல தேதி பார்த்து கிட்டே இருக்கிறேன் . நாள் தான் சரியா வரமடேன்கிறது .

ஒரு விஷயம் நான் நண்பர்கள் உடன் விவாதிப்பது . எப்படீ இந்த ஊரில் எல்லோரும் சொந்த பந்தம் ஜாதி எல்லாம் இல்லாம பொழப்ப பார்க்க முடியுது . ரொம்ப ஆச்சரியமா இருக்குது . நம்ம ஆளுகள இங்க விட்டா ஒரே வருசத்துல ஜாதி கட்சி ஆரம்பிச்சு மாநாடு போட்டு தெரு முனை இல்ல சங்க தலைவருக்கு சிலை வெச்சி செருப்பு மாலை போட்டு கலவரம் கொண்டு வந்து ஆட்சியை பிடிசுருவனுக . அப்புறம் இங்க பசங்களுக்கு ஒரே வேலை தண்ணி அடிச்சுகிட்டு தெருவுல சுத்தறது . எல்லோருக்கும் தெரிஞ்ச ஒரே கோயில் பார் மட்டும் தான் . பெருசா ஒன்னும் கடவுள் நம்பிக்கை ஒனும் ஒரு வெங்காய பயலுக்கும் இருகர மாதிரி தெரியல . நான் இருகர ஊர் ஒரு வயசானவங்க காலத்தை ஓட்டுற ஊர்.

எல்லா கிழம்கழும் தண்ணி அடிக்க ஒவொரு தெரு முனையிலும் ஒரு பார் இருக்குது . காலை எழுந்ததும் நேர பார் போற குடிமகன் நம்ம ஊருல மட்டும் இல்ல இங்கயும் இருகறாங்க . இன்னொரு விஷயம் என்னன்னா எவனும் பெருசா படிக்கிறது மாறி தெரியல . ஆனா ஒன்னு எல்லா டெக்னாலஜி இல்லையும் இவனுக தான் டாப் . எப்படீஇன்னு தெரியல . நாம ஆளுக இந்தியா வளரும் நாடு அப்டீங்கத நேவ்ஸ் பேப்பர் இல்ல படீச்சு ஒரு மமதை இல்லையே வழுரங்க இன்னு நனைகறேன் . இதுலயும் இந்தியா வுல எல்ழை விவசாயிகள் தற்கொலை பண்றதா பத்தி பேசுன சாவட்டும் அவனுக யாரு அவனுகள படிச்சு கம்ப்யூட்டர் என்கிநீர் ஆக வரவேண்டியது தானே இன்னுரானுக . அவனவன் சாபாடுகே வழி இல்லாம சாவுறாங்க இன்னு சொல்லுறது இந்த கம்ப்யூட்டர் வேலை செய்யும் கூதி களுக்கு நக்கல இருக்குது .

சிதம்பரம் இன்னு ஒரு நிதி அமைச்சர் இருக்கான் . அவனுக்கு தொழிலே பிசினஸ் மென் சுன்னிக்கு சோப்பு பூடு ஊம்ப்றது தான் . ஒரு சாதரண மனுசனோட தேவை ஆனா சாபடுக்கே வழி பண்ண முடியாத பொருளாதாரம் வளர்ந்த என்ன அது நாசமா பூனா என்ன யாருக்கு வேணும் பொருளாதார வளர்ச்சி . அதுல இன்னொரு அமெரிக்கா சூன்னி ஊம்பி மன்மோகன் சிங்க் இன்னு ஒரு தேவிடியா பயன். எப்ப புஷ் பொண்டாடி ஜட்டி காலடி போடுவ அத எடுத்து நக்குவோம் இன்னு கத்துகிட்டு இருக்கறவன் . இந்த தேவிடா பசங்க ஒரு தேர்தல் இல்ல நின்னு ஒரு ஒட்டு கூட வாங்காம பின் கதவு வழிய பொருளாதார மேதை இன்கர பேருல நுளைஜவனுக அடுதவனுக சன்னி ஊம்பயே பொழைப்பை ஒட்டி பழக்கம் .

Monday 28 July 2008

வளர்ந்த இந்தியா

இன்னா பண்றது? சோறு துன்னாவணுமே!
துன்பப்படுகிறவர்களைக் கண்டால் ஓடோடி துயர் நீக்கும் ஹீரோக்களும், குத்தாட்டம் போட்டே கலைச்சேவை செய்கிற ஹீரோயின்களும் நிறைந்த கோடம்பாக்கத்தில் ஒரு நாள்.
இடுப்பில் கோவணம், கையில் ஒரு மூங்கில் கழியோடு தள்ளாத வயதில் சேற்றில் புதைந்து கிடந் தார் அந்த மனிதர். வகைவகையாய் மனிதர்கள் தின்று கழித்த சேறு அது. கைக்குட்டையால் மூக்கைப் பொத்திக் கொண்டு இரண்டு கால் ஜீவன்கள் சிரமத்துடன் கடந்து கொண்டிருந்தனர். அருகில் நின்று பேச்சுக் கொடுத்தேன். ""வயசானவன்னு பாக்கறியா! தொழில் சுத்தமா இருக்கும்'' என்று ஆரம்பித்தார்.
""பேரு ஆதிமூலம். ஊரு மதுராந்தகம். எத்தினி வயசுன்னு எனக்கே தெரியாது. 53ல வேலைக்கு சேந்தேன். 96ல ரிட்டைடு ஆயிட்டேன். மூவாயிரம் ரூபா சம்பளம். மொத சம்சாரம் அம்மச்சி செத்துப் போனப்புறம் ரெண்டாவதா சந்திராவ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். மொத்தம் எனுக்கு நாலு பசங்க. ஒரு பையன் மூணு பொண்ணு.
தொடர்ந்து படிக்க ................................

Thursday 24 July 2008

எமிரடேச்ஸ் பிளைட் துபாய் டு லண்டன்

நான் இந்த கட்டுரை பிளைட் பயணம் செய்யும்போது சொல்லுவதாக வைத்து இருக்கறேன். நான் பிப்ரவரி மாசம் இந்தியா வந்து திரும்பும் போது எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தேன் . கோயம்புத்தூர்ல் இருந்து சென்னை ஜெட் விமானம் . பின்னர் அதிகாலை மூணு மணிக்கு எமிரடேச்ஸ் விமானம் மூலம் துபாய் கிளம்பி வந்தேன். மதியம் பனிரெண்டு மணி இருக்கும் துபாய் வந்து சேர்ந்தது. பின்பு மாந்செஸ்தெர் பிளைட் பிட்பகல் மூணு மணிக்கு தான். அதே எமிரடேச்ஸ் விமானம் . பிற்பகல் பிளைட் என்பதால் வளைகுடா நாடுகள் மீது பிளைட் பறக்கும் போது அதன் பூவி அமைப்பு கவனிக்க நன்றாக இருக்கும் . ஒரே செக்க செவேல் என்ற நிறம் . நீங்கள் ஜன்னல் ஓர இருக்கை கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும் . அதுவும் விமான கடைசீயும் இல்லாமல் மதியும் இல்லாமல் ஜன்னல் சீட் வாங்கினால் நலம். பிளைட் இன் முதல் இரண்டு மணி நேரம் போவதே தெரியாது .

Wednesday 23 July 2008

எழுத்தாளர் ஜெயமோகன் வரிகள்

என் மன அமைப்பின்படி எனக்கு எப்போதும் எதிலும் பூரண நம்பிக்கை வந்தது இல்லை. எங்கும் தர்க்கமே முன்னிட்டு நிற்பதனால் ஒன்றை நம்பி ஏற்பது என்பது எனக்குச் சாத்தியமில்லாததாகவே உள்ளது. என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை நான் கடவுளை வழிபட்டதில்லை. பிரார்த்தனைகள் செய்ததோ வழிபாடுகள் ஆற்றியதோ இல்லை. இந்த நிமிடம் வரை எனக்கோ குழந்தைகளுக்கோ எவ்வித மதச்சடங்குகளும் செய்து கொண்டதும் இல்லை. இறந்துபோன என் பெற்றோருக்கான நீத்தார் கடன்களைக்கூட அதில் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தால் நான் செய்யவில்லை. இந்து மதத்தின் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, பலநூறு சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் எதிலும் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரை நான் நம்பாத எதையும் செய்வதும் இல்லை.
---ஜெயமோகன் கூறியது

Sunday 20 July 2008

கனவு இல்லம்...கனவேவா?

'காணி நிலம் வேண்டும்..பராசக்தி காணி நிலம் வேண்டும்'னு கவி பாடிய கனவு போலாகிவிட்டது இன்றைக்குச் சென்னையில் வீடு வாங்குவது. லட்சங்களில் புரண்டு கொண்டிருந்த 'ரியல் எஸ்டேட்' வியாபாரம், இன்றைக்கு கோடிகளில் புரளுகிறது.நடுத்தர வர்க்கங்கள், கனவுலகில்தான் சென்னையில் வீடு வாங்க வேண்டும், அதுவும் கூட சென்னையின் எல்லைக்கோட்டைத்தாண்டித்தான் வாங்க வேண்டும் போலிருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில், நிலங்களில் விலை 100 சதவிகிதத்திற்கும் அதிகமாகியிருக்கிறது.சென்னையின் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்ற பகுதியாயிருந்த கிராமமாகக் கருதப்பட்ட பெருங்குடியில், 2003-2004 வருடங்களில் ஒரு கிரவுண்ட் (2400 சதுர அடி) நிலம் 3 - 5 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருந்தது. இப்போது பழைய மகாபலிபுரம் சாலையில் பெருகுகின்ற பல்நாட்டு கணிணி நிறுவனஙகளின் அலுவலங்களின் காரணமாய், ஒரு கிரவுண்ட் நிலம் 50-60 லட்சங்களுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது, என்றால் வளர்ச்சி விகிதத்தை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.யுகம் யுகமாக 'code' எழுதி சம்பாதித்தால் கூட, அவ்வளவு சுலபமாய் கோடிகளில் புரள முடியாது. நாலு கிரவுண்ட் வாங்கி வைத்திருந்தீர் களென்றால், கோடு எழுதிச் சம்பாதித்ததை விட அதிகமாய்ச் சம்பாதித்து ரிடையர்மெண்ட் வாங்கி இருக்கலாம்.இந்த அளவு நிலங்களின் விலை உயர்வதற்கு பெரிதும் துணை போனது, கணிணித்துறைதான் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாய் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், அது ஒரு தூண்டுகோலாக இருந்திருக்கலாமே தவிர, அதுவே முழுக்காரணமாய் இருக்கும் என்று தோன்றவில்லை.அப்போது, வீடு வாங்குவதற்கான கடனின் வட்டி விகிதங்கள் குறைவாக இருந்தமையும் ஒரு காரணம். வாடகை கொடுப்பதைவிட சற்று அதிகமாக EMI கட்டினால் போதும், என்ற வங்கிக் கடன் வாரியங்களின் விளம்பரமும் துணைபோனது. 'ரியல் எஸ்டேட்'டின் ஆரம்ப நிலை வளர்ச்சிக்கு, நியாமான காரணங்கள்தாம்.மக்களின் 'கனவு இல்லம்' ஆசை, ரியல் எஸ்டேட் முதலீட்டாளர்களின் மூளையை முடுக்கிவிட, ஊருக்குள் இருக்கின்ற இரண்டு/மூன்று கிரவுண்ட் நிலத்தோடு இருப்பவர்களை அணுகி, கணிசமான பணத்தையும், ஒரு ஃபிளாட்டையும் கொடுத்து, அதற்கான விலையை இதர ப்ளாட் விலையில் ஏற்ற ஆரம்பித்தனர்.இது ஒரு பக்கமிருக்க, புரோக்கர்கள் இன்னொரு பக்கம்.. யாராவது நிலம் வாங்க/விற்க வந்தால், அவர்களுக்கு கமிஷன் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, ஒன்றுக்கு ரெண்டாக விலை சொல்ல ஏற்றினர்.தேவைக்கு வாங்குவோர்/விற்போர் போக, வங்கிகள் டெபாசிட்களுக்கு தரும் முதலீட்டை விட, நிலத்திலான முதலீடு அதிகப் பணம் ஈட்டித்தருவது புரிய ஆரம்பிக்க, பணம் வைத்திருப்போர் (NRI உட்பட) நிலத்தில் முதலீடு செய்வது அதிகரித்ததும், விலை ஏற ஒரு காரணம்.இதிலும் புரோக்கர்களின் அட்டகாசம்... வீடு விற்க நினைக்கிற ஆசாமிக்கு அதிக விலை வாங்கித்தருவதாகக் கூறி, வாங்குவதற்கு ஆள் ஏற்பாடு பண்ணுவர்கள். அந்த ஆளிடம், அந்த வீடு வாங்குகிற அளவுக்கு மொத்தமாகப் பணம் இருக்காது. ஆனாலும், விற்கிற பார்ட்டியை சம்மதிக்க வைத்து சேல் அக்ரிமெண்ட் போட்டுவிடுவார்கள். வாங்கிய பார்ட்டி பணத்தை புரட்டுவதாகக் கூறி ஒரு ரெண்டு மூணு மாசம் தாமதிக்க வேண்டியது..அதற்குள் அடுத்த பார்ட்டி பிடித்து, விலையை ஏற்றி ரெண்டாவது நபருக்கும், மூணாவது நபருக்கும் அக்ரிமெண்ட் போட்டு, அதில் அடுத்த செட் கமிசன் வாங்கி, முதல் பார்ட்டியை செட்டில் பண்ணுவது....இந்தச் செயின் இப்படியே தொடர்ந்ததும் விலை உயரக்காரணம்.

Friday 18 July 2008

சாப்ட்வேர் பொறியாளர் ஒருவரின் புலம்பல்

புத்தகம் படிப்பது சிறு வயதில் பிடித்தது; அரசியல் பேசியது இள வயதில் பிடித்தது; கம்ப்யூட்டர் கல்லூரியில் பிடித்தது; நண்பர்களை எப்போதும் பிடிக்கிறது; ஆனால் - இப்போது எனக்கே தெரியவில்லை நேரம் பார்க்காது கம்ப்யூட்டரில் உழைத்து வாழ்வை தொலைத்து எதை தேடி போகிறேன் என்று; எனவே என்னால் சொல்ல இயலவில்லை இது தான் பிடிக்கும் என்று!

Computer Engineer work

Nalla eruku

Thursday 17 July 2008

போட்டோகள் நல்ல இருக்கும்

நல்ல போட்டோகள் இந்த சைட் இல்ல இருக்கிறது

http://photopage.wordpress.com/category/brihadeeswarar/

வேதங்களும் உறிச்ச வெங்காயமும்!

ரொம்ப அழகாக வீதங்கள் பத்தின விளக்கம் கிடைக்கும் படியுங்கள் .
சொடுக்குக.

வேதங்களும் உறிச்ச வெங்காயமும்!

ஆங்கிலத்தில் காமசுத்ரம்

படித்து தெளிவு பெருக.
kkhttp://www.sacred-texts.com/sex/kama/index.htm

இளமை இதோ இதோ பாடல் நிஷா நிலைமை

சொடுக்கி படிக்கவும்

http://www.chittarkottai.com/general/nisha.htm

கர்மவீரர் காமராஜர்

Today is King maker – Kamarajar's birthday. K. Kamaraj was the Chief Minister of Tamilnadu with the longest tenure without intervening President's rules. His terms lasted from 13 April 1954 to 2 October 1963.

Below is an example to portrait how great he is. (Those who want to know more about Kamarajar can check this link - http://www.kamaraj.com/life.htm).

We have also attached a document about his life to help everyone understand the service he did for the society.

Wednesday 16 July 2008

தமிழில் பழமொழிகள்

கில உள்ள லிங்க் சொடுக்கு
தமிழ் பழமொழிகள்

Monday 14 July 2008

தஞ்சை பெரியகோவில்




தஞ்சை பெரியகோவில்

மேலும் நிறைய படிக்க கீழே சொடுக்கு :
http://ponvandu.blogspot.com/2008/02/blog-post.html

நோய்களை விரல் நிறம் சொல்லும் - படியுங்கள்

http://www.dinamalar.com/varamalar/vmrjuly-1307/varamalar5_1307.asp

தினமலர் இல் வந்தது

Friday 11 July 2008

பெருகிவரும் வன்முறை - தோழி இதழில் அருந்ததிராய்


நாட்டில் வன்முறை பெருகிவரும் சூழல் நிலவுவதாகத் தோன்றுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? எத்தகைய பின்னணியில் இவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும்?
இந்த அறிகுறிகளைப் புரிந்துகொள்ள நீங்கள் மேதையாக இருக்கவேண்டியதில்லை. நமது நடுத்தரவர்க்கம் தடாலடியான நுகர்வுக் கலாச்சாரத்திலும் மூர்க்கத்தனமான பேராசையிலும் ஊறி வளர்ந்திருக்கிறது. தொழில்மயமான மேற்கத்திய நாடுகளிலிருந்து வேறுபட்ட வகையில் இதற்கான வளத்தைச் சேகரிக்கவும் அடிமைப் பணியாளர்களைத் திரட்டவும் நம்மை நாமே காலனியமயமாக்கிக்கொள்ள நேர்ந்திருக்கிறது.
நமக்குக் கீழே உள்ளவர்களைச் சுரண்டவேண்டியிருக்கிறது. நமது உறுப்புகளை நாமேதின்கிறோம். இப்படி உருவாகும் (இது தேசப்பற்றுக்கு மாற்றான ஒரு மதிப்பாக மார்க்கெட்டிங் செய்யப்படுகிற) பேராசையை, வலுவற்றவர்களின் நிலத்தையும் நீரையும் பிற ஆதாரங்களையும் ஆக்கிரமித்துத்தான் தீர்த்துக்கொள்ள முடிகிறது.
சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்ததிலேயே மிக வெற்றிகரமாக நடந்துவரும் பிரிவினைப் போராட்டத்தைத்தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நடுத்தர வர்க்கமும் மேல்தட்டு வர்க்கமும் நாட்டிலுள்ள பிற மக்கள் கூட்டத்திடமிருந்து பிரிவதுதான் இந்தப் பிரிவினை. இந்தப் பிளவு நீளவாக்கில் நடைபெறுகிறது; குறுக்குவாட்டில் அல்ல. உலகிலுள்ள பிற மேல்தட்டு வர்க்கங்களுடன் இணைந்துகொள்ளவே அவர்கள் போராடுகிறார்கள். இயற்கை ஆதாரங்கள், நிலக்கரி, தாதுப் பொருட்கள், பாக்சைட், தண்ணீர், மின்சாரம் - எல்லாம் அவர்களது வசமாகியுள்ளன.
புதிய எதேச்சாதிகாரத்தின் புதிய கௌரவப் பிரஜைகளுக்குப் புதிய சிறப்பான விளையாட்டுப் பொருள்களை - இன்னும் அதிகமான கார்களை, இன்னும் அதிகமான வெடிகுண்டுகளை, இன்னும் அதிகமான சுரங்கங்களை உருவாக்குவதற்கான நிலம் இப்போது அவர்களுக்குத் தேவைப்படுகிறது. எனவே இது வெளிப்படையான ஒரு போர். இரு தரப்பிலும் உள்ள மக்கள் தங்களுக்கான ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். அரசும் நிறுவனங்களும் அமைப்பு ரீதியான சமரசங்கள், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, பன்னாட்டு மூலதனம், சாதகமான நீதிமன்ற ஆணைகள், சிநேகமான கொள்கை வகுப்பாளர்கள், 'நட்பான' கார்ப்பரேட் ஊடகங்கள், இவ்வளவையும் மக்களிடம் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் காவல் துறை ஆகியவற்றின் உதவியை நாடுகின்றன.
இதை எதிர்ப்பவர்கள் இதுவரை மறியலையும் உண்ணாவிரதத்தையும் சத்தியாக்கிரகத்தையும் மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்தார்கள்; நீதிமன்றங்களையும் நட்பார்ந்த ஊடகத்தையும் நம்பியிருந்தார்கள். ஆனால், இப்போது அவர்கள் துப்பாக்கி ஏந்தத் தொடங்கிவிட்டார்கள். இந்த வன்முறை அதிகரிக்குமா? முன்னேற்றத்தையும் மக்கள் நல்வாழ்வையும் அளவிடுவதற்கு அரசு 'வளர்ச்சி விகித'த்தையும் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணையும் தான் பயன்படுத்தும் என்றால் வன்முறை அதிகரிக்கத்தான் செய்யும். இந்த அறிகுறிகளை நான் எப்படிப் புரிந்து கொள்கிறேன்? அப்பட்டமாகத் தெரிவதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது என்பதில் சந்தேகமில்லை.
வன்முறையில் இறங்கமாட்டேன், ஆனால் நாட்டில் நிலவும் சூழலில் அதைக் கண்டனம் செய்வது தார்மீகமற்றது என்று நீங்கள் ஒருமுறை குறிப்பிட்டிருந்தீர்கள். இந்தக் கண்ணோட்டத்தை விரிவாக விளக்க முடியுமா?
நான் கெரில்லாவாக இருந்தால் சுமையாகத்தான் இருப்பேன்! 'தார்மீகமற்றது' என்னும் வார்த்தையை நான் பயன்படுத்தினேனா என்று சந்தேகமாக இருக்கிறது. தார்மீகம் என்பது பிடிபடாத சமாச்சாரம்; அது வெப்பநிலைபோல மாறிக்கொண்டே இருப்பது. வன்முறைசாரா இயக்கங்கள் பல ஆண்டுகளாக இந்த நாட்டிலுள்ள எல்லா ஜனநாயக நிறுவனங்களின் கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு முறையும் அவை வெறுப்புடன் நிராகரிக்கப்படுகின்றன; அவமானப்படுத்தப்படுகின்றன.
போபால் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டவர்களையும் நர்மதா அணைத் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் பாருங்கள். நர்மதைப் பாதுகாப்பு இயக்கத்திற்குச் சாதகமான பல அம்சங்கள் இருக்கின்றன - பிரபலமான தலைவர்கள், ஊடகச் செய்திகள், வேறு எந்த மக்கள் இயக்கத்தையும்விட அதிக வசதிகள் ... ஆனால், பிழை எங்கே நேர்ந்தது? மக்கள் கட்டாயம் தங்கள் போராட்ட உத்திகளை மாற்றிக்கொள்ளவே விரும்புவார்கள்.
தாவோசில் உலகப் பொருளாதார அமைப்புக் கூட்டத்தில் சோனியா காந்தி சத்தியாக்கிரகத்தின் மேன்மை பற்றிப் பேசத் தொடங்குகிறார் என்றால் நாம் நிமிர்ந்து உட்கார்ந்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பொருள். உதாரணமாக, ஒரு ஜனநாயக அரசமைப்பில் ஒத்துழையாமைப் போராட்டம் சாத்தியமா? தகவல் புரட்டும் கார்ப்பரேட் கட்டுப்பாட்டில் உள்ள வெகுஜன ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில் அது சாத்தியமா? உண்ணாவிரதப் போராட்டங்களுக்குப் பிரபலங்களின் அரசியலுடன் தொப்புள் கொடி உறவு இருக்கிறதா? நங்கலா மச்சியிலோ பட்டிசுரங்கங்களிலோ மக்கள் பட்டினிப் போர் நடத்தினால் அது பற்றி யாராவது கவலைப்படுவார்களா? இரோம் சர்மிளா ஆறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
நம்மில் பலருக்கும் அது படிப்பினையாக இருக்க வேண்டும். பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் ஒரு நாட்டில் உண்ணாவிரதப் போராட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத் தப்படுவது வேடிக்கையான முரண்பாடு என்றுதான் எனக்கு எப்போதும் தோன்றும். நாம் இப்போது வேறு காலத்தில், வேறு இடத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். வேறு மாதிரியான, மேலும் சிக்கலான எதிரிகளை எதிர்கொண்டிருக்கிறோம். நாம் என்.ஜி.ஓ. யுகத்தில் பிரவேசித்திருக்கிறோம். இதில் மக்கள் செயல்பாடு என்பது நம்பத்தகாத ஒன்றாக இருக்கக்கூடும். போராட்டங்கள் நிதியுதவியுடன் நடத்தப்படுகின்றன.
மறியல்களும் சமூக அமைப்புகளும் ஸ்பான் சர்ஷிப்பில் நடக்கின்றன. இவை ஆக்ரோஷமாகக் குரல் கொடுக்கின்றன. ஆனால் தாம் போதிப்பதை அவை நிறைவேற்றுவதில்லை. எல்லா விதமான போலிப் போராட்டங்களும் நடக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிரான கூட்டங்களுக்கு அந்த மண்டலங்களின் மாபெரும் ஆதரவாளர்களே நிதியுதவி செய்கிறார்கள். சுற்றுச்சூழல் சார்ந்த பணிக்கும் கூட்டு நடவடிக்கைக்குமான விருதுகளையும் நல்கைகளையும் சுற்றுச்சூழல் அமைப்புகளை மொத்தமாக ஒழித்துக்கட்டும் நிறுவனங்களே வழங்குகின்றன.
ஒரிசா காடுகளில் பாக்சைட் அகழ்ந்தெடுக்கும் வேதாந்தா என்ற நிறுவனம் ஒரு பல்கலைக்கழகம் தொடங்க விரும்புகிறது. நாடு முழுவதிலும் உள்ள போராட்டக்காரர்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பொருளாதார உதவி வழங்கும் இரண்டு அறக்கட்டளைகளை டாடா நிறுவனம் நடத்துகிறது. நந்திகிராம் அளவு சிங்கூர் விமர்சிக் கப்படாதது அதனால்தானோ? இப்போது உள்ள என்.ஜி.ஓ.க்கள் மிகுந்த ஆரவாரம் ஏற்படுத்துகின்றன, ஏராளமான அறிக்கைகள் எழுதுகின்றன; அரசோ இவர்களுடன் அந்நியோன்யமாக இருக்கிறது. இதையெல்லாம் நாம் எப்படிப் புரிந்துகொள்வது? நிஜமான அரசியல் செயல்பாடுகளை மந்தப்படுத்துபவர்கள்தான் இங்கே குவிந்திருக்கிறார்கள். போலி எதிர்ப்பு ஒரு சுமையாகவே ஆகியிருக்கிறது.
ஒரு காலத்தில் மக்கள் இயக்கங்கள் நீதிக்காக நீதி மன்றங்களை நம்பியிருந்தன. மிகவும் அநீதியான, ஏழை மக்களை மிகவும் அவமானப்படுத்தும் வார்த்தைகளில் அமைந்த தீர்ப்புகளை நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிக் குவித்திருக்கின்றன. அவற்றை நினைத்தாலே மூச்சு நின்றுவிடும்போலிருக்கிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம், வசந்த்கஞ்ச் மாலின் கட்டுமானப் பணியை - தேவையான ஒப்புதல்கள் எதுவும் அதற்கு இல்லாத நிலையிலும் - தொடர அனுமதி வழங்கியது. நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபடுமா என்ற கேள்வி எழவே இல்லை என்பதைத்தான் நீட்டி முழக்கிச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
கார்ப்பரேட் உலகமயமாக்கம், கார்ப்பரேட் நில ஆக்கிரமிப்பு யுகத்தில், என்ரான், மான்சான்டோ , ஹாலிபர்ட்டன், பெக்டெல் யுகத்தில் அந்தக் கூற்றுக்கு அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. இது இந்த நாட்டிலேயே மிகச் சக்திவாய்ந்த அமைப்பின் சித்தாந்தத்தை அம்பலப்படுத்துகிறது. கார்ப்பரேட் பத்திரிகைகளுடன் இப்போது நீதித் துறையும் புதிய தாராளவாதச் செயல் திட்டத்தின் முதுகெலும்பாகவே தெரிகிறது.
இது போன்ற ஒரு சூழலில், மக்கள் இந்த முடிவற்ற 'ஜனநாயக' நடவடிக்கைகளால் ஓடாகத் தேய்ந்து போனது போல் உணரும்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இதற்கு வன்முறை, அகிம்சை என்ற இரண்டே தேர்வுகள்தாம் இருக்கின்றன என்றில்லை. ஆயுதப் போராட்டத்தை நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால் அவை வன்முறையைத் தங்கள் ஒட்டு மொத்த அரசியல் உத்தியில் ஒரு அம்சமாக மட்டுமே வைத்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் அரசியல் தொண்டர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட் டிருக்கிறார்கள்; கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பொய்யான குற்றங்கள் சுமத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆயுதத்தைக் கையில் எடுப்பது என்றால் இந்திய அரசின் பலவிதமான வன்முறைகளுக்கு அழைப்பு விடுப்பது என்பதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். ஆயுதப் போராட்டம் ஒரு உத்தியாக மாறும் அந்த நொடியில் நம் உலகம் சுருங்கிவிடுகிறது; அதன் வண்ணங்கள் மங்கிக் கறுப்பு-வெள்ளை ஆகின்றன. ஆனால், மற்ற எல்லா வழிகளும் வேதனையில் முடிந்ததால் மக்கள் அப்படி ஒரு முடிவை மேற்கொண்டால் நாம் அதைக் கண்டனம் செய்தாக வேண்டுமா?
நந்திகிராமில் மக்கள் மறியல் நடத்திப் பாட்டெல்லாம் பாடியிருந்தால் மேற்கு வங்க அரசு பின்வாங்கியிருக்கும் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? செயலற்றுக் கிடந்தால் இருக்கும் நிலைமையை ஆதரிப்பதாகும் (நம்மில் சிலருக்கு அது வசதியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை) காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். செயல்வேகம் கொண்டவர்களாக ஆகப் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. அந்த விலையைக் கொடுப்பவர்களைக் கண்டனம் செய்வது என்னால் முடியாது.
இது தொடர்பாக நீங்கள் பல இடங்களுக்குப் பயணம் செய்துவருகிறீர்கள். இது போன்ற பிரச்சினைக்குரிய இடங்களில் என்ன நடக்கிறது என்று சொல்ல முடியுமா? இந்த இடங்களில் நடைபெறும் போராட்ட முறைகளைப் பற்றிச் சொல்ல முடியுமா?
பெரிய கேள்வி - நான் என்ன சொல்ல? காஷ்மீரில் ராணுவ ஆக்கிரமிப்பு, குஜராத்தில் நியோ பாசிசம், சட்டிஸ்கரில் உள்நாட்டுப் போர், ஒரிசாமீது பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வன்கொடுமை, நர்மதைப் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் நீரில் மூழ்கிப்போனது, முழுப் பட்டினியின் விளிம்பில் வாழும் மக்கள், கானக நிலத்தின் சீரழிவு, போபால் விஷவாயுக்கசிவில் உயிர் பிழைத்த மக்கள், அதே யூனியன் கார்பைடு நிறுவனத்தை - இப்போது அதன் பெயர் டோ கெமிக்கல்ஸ் - நந்திகிராமுக்கு அழைக்க மேற்குவங்க அரசு ஊக்கப்படுத்துவதைப் பார்ப்பது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு நான் அண்மையில் போகவில்லை.
ஆனால் லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பது நமக்குத் தெரியும். ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெறும் போலி என்கவுண்டர்களையும் கொடும் ஒடுக்குமுறையையும் பற்றி நமக்குத் தெரியும். இந்த இடங்கள் ஒவ்வொன்றுக்கும் அதற்கென்று ஒரு வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல் ஆகியவை உண்டு. எனினும் இவற்றை இணைக்கும் சரடு ஒன்று உண்டு - அவைமீது மிகப்பெரும் சர்வதேச கலாச்சார, பொருளாதார நிர்பந்தங்கள் சுமத்தப்படுகின்றன. இந்துத்வச் செயல்திட்டங்களை எப்படிச் சொல்லாமல் இருக்க முடியும்? அது தனது விஷத்தை நுட்பமாகப் பரப்பிக்கொண்டு மீண்டும் வெடிக்கக் காத்திருக்கிறது.
இவற்றையெல்லாம்விடப் பெரும் குற்றம், நாம் இப்போதும் தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் ஒரு நாடாக, கலாச்சாரமாக, சமுதாயமாக இருக்கிறோம் என்பதுதான். நமது பொருளாதார நிபுணர்கள் எண்களுடன் விளையாடி வளர்ச்சி விகிதத்தைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டிருக்க, லட்சக்கணக்கான மக்கள் - தோட்டிகள் - அன்றாட வயிற்றுப் பாட்டுக்காக மற்றவர்களின் மலத்தைக் கிலோ கணக்கில் தலையில் சுமந்து செல்கிறார்கள். அவர்கள் மலத்தைத் தலையில் சுமக்கவில்லை என்றால் பட்டினி கிடந்துசாக வேண்டும். இதுதான் ஒரு வல்லரசின் லட்சணமா?
அடுத்த தோழி இதழில் நேர்காணலின் தொடர்ச்சி இடம்பெறும்
.நன்றி: காலச்சுவடு

நம்புங்க !!! செக்ஸ் உடல் நலம் காக்கும்

Cute கவிதை

Thursday 10 July 2008

எங்கே செல்லும் இந்தப் பாதை?- சுட்டது


இன்றைக்கு இந்தியாவிலேயே தலையாய பிரச்சனை என்று எதைக் கருதுகிறீர்கள் நீங்கள்….?


திசை மாறிப் போன விவசாயக் கொள்கைகளால் கூட்டம் கூட்டமாகத் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நிலையா?
“சுதந்திரம்” பெற்று 59 ஆண்டுகளாகியும் உயர்கல்வி நிறுவனங்களில் இன்னும் முழுமையாக நிறைவேறாமல் இழுத்துக்கொண்டு கிடக்கும் சமூக நீதி குறித்தா?
உள் நாட்டு வர்த்தகங்களுக்கு மூடுவிழா நடத்திவிட்டு புதிய கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கு மகுடம் சூட்டுகின்ற “தாராள”தொழிற் கொள்கைகள் பற்றியா?
இப்படித் தேவையற்ற சாதாரணச் சிக்கல்கள் குறித்தெல்லாம் நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நீங்கள் ஒரு “தேசத்துரோகி”யாகத்தான் இருக்க முடியும். இன்றைக்கு இதுவா பிரச்சனை?
மேற்கத்திய நாடுகள்…குறிப்பாக அமெரிக்கர்கள் தூங்கும் நேரத்தில் தாமும் உறங்கி….அவர்கள் விழிக்கும் நேரத்தில் தாமும் எழுந்து…அவர்கள் காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிக்கும் நம் தகவல் தொழில் நுட்பத் துறையினர் படும் இன்னல்களை விடவா அதி முக்கியமானவை இந்த விவசாயிகள், தொழிலாளர்கள் படும்பாடுகள்?
8 மணி நேரம் உழைப்பு - 8 மணி நேரம் ஓய்வு - 8 மணி நேரம் உறக்கம் என்பதெல்லாம் நம்மைப் போன்ற படு சோம்பேறிகளுக்குத்தான். இந்தக் கணிப்பொறி மேதைகள் “சமூக முன்னேற்றத்திற்காக” ஓய்வும் உறக்கமுமின்றி ஓடாய் உழைக்கும் பொழுதுகள் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தெரியுமா? அதிகமில்லை கனவான்களே.. ஏறக்குறைய இருபது மணி நேரம்தான்.
இப்படிப் படாத பாடுபட்டு பணி முடிந்து வீடு திரும்பும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டிவிடுவது முதல் பிரச்சனை.
இக்கண்ணியவான்கள் சாதாரண உழைக்கும் மக்களோடு சேர்ந்து டாஸ்மாக்கில் குடிக்க முடியாது என்பது இரண்டாவது பிரச்சனை.
அந்த டாஸ்மாக்கும் இரவு 11 மணிக்கு மேல் திறந்திருப்பதில்லை என்பது மூன்றாவது பிரச்சனை.
நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்துத் திரும்பும் இந்த நடுநிசி நாயகர்களுக்குக் காத்திராமல் PUBS களை ஒரு மணிக்கே மூடி விடுவது நான்காம் பிரச்சனை.
அப்படியே கிடைத்தாலும் அருந்திவிட்டு வருபவர்களை சர்வ பாதுகாப்பாக வீட்டில் கொண்டு போய் சேர்க்காமல் வழி மறித்துக் கேள்விகள் வேறு கேட்கிறதே காவல்துறை என்பது ஐந்தாவது பிரச்சனை.இப்படி ஒன்றா இரண்டா இச்”சமூக சேவகர்கள்” சந்திக்கும் இன்னல்கள்?எதற்காக? காசய்யா காசு. நீங்கள் முப்பதாண்டுகள் முட்டி தேய உழைத்த பிறகு எண்ணிப் பார்க்கும் மொத்த காசையும் மூன்றே மாதத்தில் சுளையாக எண்ணிப் பார்ப்பதென்றால்…இரவாவது பகலாவது?சுதேசியாவது விதேசியாவது?தான் சீரழிந்தால் என்ன சமூகம் சீரழிந்தால் என்ன?அப்பன் சாவைக்கூட சி.டி.யில் பார்த்தால் போயிற்று.சம்பளத்தை விடவா சமூகம்?
இப்படி பிற துறையினர் சம்பாதிக்கவே இல்லையா?இவர்கள் மட்டும்தானா?உங்கள் கேள்வி நியாயம்தான்.
உண்மை.ஆனால் அவர்கள் எவரும் விடிய விடிய மதுபானக் கடைகளை தங்கள் “தியாகங்களுக்கு” ஈடாக திறந்து வைக்கச் சொல்லவில்லை.” ‘இரவு வாழ்க்கை’ குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கோரிக்கை வைக்கவில்லை.நடு இரவு வரை தார்ச் சாலை போட்டு விட்டு ஓரத்தில் உறங்கும் பணியாளர்கள் மீது காரை ஏற்றிக் கொல்லவில்லை.
நம்மைப் பொறுத்தவரை ….நாள் முழுக்க ஓடாய்த் தேய்ந்து பிய்ந்த செருப்புக்களைத் தைத்துக் கொடுக்கும் ஒரு உழைப்பாளியை விட…பிறரது மலத்தைச் சட்டியில் சுமந்து சென்று தனது பாழாய்ப்போன வயிற்றைக் கழுவிக் கொண்டிருக்கிற ஒரு துப்புரவுத் தோழனைவிட ….இவர்கள் எந்த விதத்திலும் உயர்ந்தவர்களில்லை என்பதுதான்.
ஏற்கெனவே இந்த மேதைகளுக்காக புகைக்கும் அறைகளைக் கட்டிக் கொடுத்துள்ள நிறுவனங்கள் அடுத்ததாக குடிக்கும் கூடங்களையும்(PUBS) கட்டிக்கொடுக்க இருப்பதாகத் தகவல்.சபாஷ்.ஊழியர்கள் கண்ணில் நீர் வழிந்தால்எஜமானர்களுக்கு உதிரம் கொட்டாமலா இருக்கும்?
இக் கணிப்பொறி மேதைகளுக்கு இந்தியப் பொருளாதாரம் குறித்துத்தெரிந்திருக்கிறதோ இல்லையோ…ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் அத்துப்படி.உள்ளூர்ச் சேரிகளில் உயிரோடு கொளுத்தப்படுவது தெரிகிறதோ இல்லையோ….ஐரோப்பிய நாடுகளது பிரச்சனைகளை அலசி ஆராய்வதில் அசகாய சூரர்கள்.
வெளியில்தான் ஆட்டம் என்றில்லை. உள்ளுக்குள்ளும் அப்படித்தான் என்பதைப் பறைசாற்ற பாலியல் வன்முறைகளை விசாரிக்கவென்றே இருக்கின்ற REDRESSEL….மற்றும் OMS BUD போன்ற குழுக்கள்.
இறுதியாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல இருக்கிறது.குடிக்கட்டும்…கும்மாளமிடட்டும்…இரவு பகல் பொழுதுகள் புரிபடாமல் உடற்கூறின் தன்மைகள் சிதைந்துகடவுள் பாதி - மிருகம் பாதி ஆளவந்தான்களாய் அலையட்டும்.அது ஒரு கட்டம் வரை அவர்களது பிரச்சனை.ஆனால் அவர்களது வளாகத்தைத் தாண்டி வீதிக்கு வரும்போது அது சமூகத்தின் பிரச்சனை.
மேற்கத்திய நாடுகளின் மனிதர்கள் எந்தெந்த வேளைகளில் கழிப்பறைக்குச்செல்கிறார்கள்…..வெளிநாட்டுப் பயணங்களின் போது வெளியே தள்ளும் கழிவுகளுக்கான பணத்தை எப்படி முன் கூட்டியே செலுத்துவது…போன்றவற்றிற்குக் கூட Pரொக்ரம்மிங் செய்து கொடுக்கும் நம் கணிப்பொறி மேதைகளுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளும் சிலதுண்டு.
அதுதான்:முதலில் சகல துறைகளிலும் உள்ள உழைப்பாளிகள் எவரை விடவும் தாங்கள் உயர்ந்தவர்களில்லை என்பதை உணரட்டும்.
அடுத்து சம்பளம் மட்டுமே சமூக மரியாதைக்கான தகுதிகளில் தலையாயது என்கிற மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபடட்டும்.
சமூகத்தின் சகல மனிதர்களையும் தங்களது சக மனிதர்களாய் நேசிக்கக் கற்றுக்கொள்ளட்டும்.
சுதந்திரம் என்பது பிற மனிதரது மூக்கின் நுனியைத் தொடாத வரைதான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்.
இப்படி மக்களிடம் கற்றுக்கொள்ள அநேகம் இருக்கிறது அவர்களுக்கு.கற்றுக் கொள்ள மறுத்து அடம் பிடிக்கிறபோதுமிகச் சரியானதொரு சந்தர்ப்பத்தில்சமூகமே கற்பிக்கும்.
நன்றி: த சண்டே இந்தியன்

Wednesday 9 July 2008

ஆடி மாச மூட நம்பிக்கை

கர்ப்பிணிகளை ஆட்டி வைக்கும் ஆடி!
முகூர்த்தங்கள் நிரப்பிக் காத்திருக்கும் வைகாசி, அடைமழை தந்து ஆசீர்வதிக்கும் ஐப்பசி, முப்பது நாட்களும் விசேஷமாய்க் கழியும் மார்கழி.. என ஆண்டின் ஒவ்வொரு மாதமும் ஒரு புகழ் சுமக்க, அவற்றுள் 'ஆடி' மட்டும் சவலைப் பிள்ளை!
ஆம். 'சுப காரியங்கள் நடத்தக் கூடாது', 'புதுமணத் தம்பதிகள் சேர்ந்திருக்கக் கூடாது', என 'கூடாது'களின் கூடாரமாக இருக்கும் இம்மாதத்தின் கொடுமையான இன்னொரு 'கூடாது' 'ஆடியில் குழந்தை பிறக்கக் கூடாது.. அது குடும்பத்தையே ஆட்டி வைத்துவிடும்..' என்ற நம்பிக்கை!
'இப்போதெல்லாம் எங்கள் ஏரியாவில் ஆடியில் பிறக்க வேண்டிய குழந்தையை ஆனியிலேயே அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடுகிறார்கள்' என்று சிவகங்கை வாசகி ஒருவர் தகவல் தர, அதிர்ந்து போய் அங்கு சென்று விசாரித்தோம்.
''ஆடியில குழந்தை பொறந்தா குடும்பத்துக்கு ஆகாதுனு பெரியவங்க சொல்வாங்க.. அதனாலதான்..'' என்று தயங்கியபடியே பேச ஆரம்பித்த ஈஸ்வரிக்கு ஆடி முதல் வாரத்தில் பிரசவ தேதி குறிக்கப்பட்டிருக்க, ஆனி இறுதி வாரத்திலேயே சிசேரியன் செய்து கொள்வதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
''வர்றவங்க, போறவங்கள்லாம், 'அடக் கடவுளே.. ஆடியிலயா பிரசவம்..?!' னு கேட்கக் கேட்க, எனக்கு ரொம்ப குழப்பமாகிடுச்சு. எனக்கு இது மூணாவது குழந்தைங்கிறதால 'உடல் பலவீனமா இருக்கு. ஆபரேஷன்தான் பண்ணணும்'னு டாக்டர் ஏற்கெனவே சொல்லியிருந்தாங்க. அதனால, மூணு நாள் முன்னயே சிசேரியன் பண்ணப் போறோம்'' என்றவர் தொடர்ந்து,
''மத்தவங்களுக்காகவாவது இதையெல்லாம் பின்பற்ற வேண்டியிருக்கு. இல்லைனா பின்னாடி ஏதாவது சின்ன பிரச்னைனாக்கூட, 'ஆடியில பொறந்தது வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடுச்சு..'னு எம்புள்ளையத்தானே குத்தம் சொல்வாங்க..'' என்றார்!
புகைப்படம் மறுத்து பேச ஆரம்பித்த கவிதாவுக்கு ஆடி பற்றிய இந்த நம்பிக்கை தந்தது ஆயுளுக்கும் அழியாத சோகம்..
''நான் கர்ப்பமாயிருக்கேன்னு தெரிஞ்சப்போ, ஆடியில பிரசவ தேதி வர, அதனாலயே என்னை அபார்ஷன் பண்ணச் சொல்லிட்டாங்க என் மாமியார். நான் எவ்வளவோ சொல்லியும் என் கணவர் உட்பட யாருமே கேக்கல. அது எனக்கு தலைக் குழந்தை. அந்தப் பாவம்தானோ என்னவோ.. இதோட நாலு வருஷம் ஆச்சு. அதுக்குப் பெறகு என் வயித்துல குழந்தை தங்கல..'' என்று அதற்கு மேல் தொடர முடியாமல் தளர்ந்தார் அவர்.
இந்த நம்பிக்கை பற்றிக் கேட்டாலே கோபமாகிறார் சிவகங்கையைச் சேர்ந்த முருகன்.
''என் மனைவி ரெண்டாவது முறையா கர்ப்பமானப்போ, எங்களையும் 'ஆடியா..?'னு எல்லாரும் பயமுறுத்துனாங்க. ஆனா நாங்க அதையெல்லாம் சட்டையே செய்யல. என் பையன் ஆடியிலதான் பொறந்தான்.
அவன் பிறந்ததை விசாரிக்க வந்தவங்க பலரும் 'ஆடிப் பிள்ளை தாய்மாமனை ஆட்டிப் படைச்சிடுமே..'னும், 'ஆடியில பெறந்த ஆம்பளைப் பிள்ளை ஆருக்கும் அடங்காது'னும் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாங்க. ஆனா, ஆண்டவன் அருளால எங்களுக்கு எந்தப் பிரச்னையும் எற்படல. ஆண் ஒண்ணு, பொண் ஒண்ணுனு அழகா, ஆனந்தமா இருக்கு எங்க குடும்பம்'' என்று அவர் சொல்ல.. அதை சந்தோஷமாக ஆமோதித்தார் அவர் மனைவி விஜயலஷ்மி!
''முன்கூட்டி சிசேரியன் செய்யச் சொல்லி வருகிற கர்ப்பிணிகளை எப்படித்தான் டீல் பண்ணுகிறார்கள் மருத்துவர்கள்?'' என்கிற கேள்வியுடன் சிவகங்கையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரான டாக்டர் சொர்ணமீனாவை சந்தித்தோம்.
''ஆடியில பிரசவ தேதி வந்தாலே அந்த கர்ப்பிணி பெண்ணை விடவும் நாங்க-தான் ரொம்ப சிரமப்பட்டுப் போயிருவோம்'' என்று தொடங்கிய டாக்டர் குமுறித் தீர்த்தார்..
''ஆடி முதல் வாரத்துல 'ட்யூ டேட்' இருக்கறவங்க, ஆனி 28-ம் தேதியே, 'எப்படியாச்சும் குழந்தை பிறக்க வச்சுருங்க டாக்டரம்மா..'னு வந்து நிப்பாங்க. நான் திருப்பி அனுப்பிடுவேன். ஆனா, அவங்க வேற எங்கியாவது போய் சிசேரியன் பண்ணிக்கத்தான் செய்றாங்க. என்ன செய்ய?'' என்று வருந்தியவர், அடுத்துச் சொன்ன செய்தியில் 'ஆடி'த்தான் போனோம்.
''ஒருமுறை ஆடி 32 -ம் தேதி ராத்திரி ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்திருக்கு. ஒரு ராத்திரி வலியை அடக்கிட்டா(?!) காலையில ஆஸ்பத்திரி போய்க் குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சவ, பல்லைக் கடிச்சிக்கிட்டு இருந்திருக்குறா. அதுல நீர் வத்தி, ரத்தப்போக்கு அதிகமாகி.. கடைசியில அவ பிழைச்சதே தெய்வச் செயல்னு ஆகிப் போச்சு!'' என்று சொல்லும்போதே அவரோடு சேர்ந்து நமக்கும் நடுங்குகிறது. தொடர்ந்த டாக்டர்..
''சிசேரியன்ங்கிறது தாய், சேய்னு ரெண்டு உயிருக்கும் சேதம் ஏற்பட்டுடக் கூடாதுங்கிற அக்கறையில கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மருத்துவ முறை. அதை இப்படி மூடநம்பிக்கைக்கான கருவியா ஆக்குறது மருத்துவ தொழிலுக்கு செய்ற துரோகம். தாயோட கர்ப்பத்துல 38 வாரங்கள் வளர்ந்தாத்தான் ஒரு கரு முழுமையான வளர்ச்சியடையும். இப்படி முன்கூட்டியே குழந்தையை வெளியில எடுத்தா மூச்சு விடறதுல பிரச்சனை, தொற்று நோய்னு குழந்தைக்கு பல சிக்கல்கள் ஏற்படும்'' என்று பாரத்துடன் முடித்தார்.
இந்த ஆடி நம்பிக்கை பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
****************************************************************************
ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன், சென்னை:
''இதெல்லாம் மக்களால் உண்டாக்கப்பட்ட மூடநம்பிக்கைதான். சூரியன் கடகத்துக்கு இடம்பெயரும் மாதம் ஆடி. கடகம், ஆதிபராசக்தியின் வீடு. எனவே சூரியனும் சக்தியும் சேரும் இம்மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் சுபிட்சமாக இருப்பார்கள். நிர்வாகத் திறமையில் தேர்ந்து விளங்குவார்கள்..''
பி.என். பரசுராமன், ஆன்மிக நிபுணர், சென்னை:
''கந்தரலங்காரத்தில் வருகிற 'நாளென் செயும் வினைதான் என் செயும்..' என்கிற பாடல் என்ன சொல்கிறது தெரியுமா? 'எந்த ஒரு செயலையும் செய்ய நல்ல நாளையும் கெட்ட நாளையும் பார்க்க வேண்டாம்.. கோள்கள் ஏதேனும் செய்யுமோ என்று அஞ்சவும் வேண்டாம். இறைவனுடைய வல்லமையின் முன் அவை அனைத்துமே செயலற்றவை' என்கிறது.
'ஈசனின் திருவடியை வழிபடும் அடியவர்களுக்கு ஒன்பது கோள்களினாலும் ஒரு துன்பமும் இல்லை' என்கிறார் திருஞான சம்பந்தர். நாளையும் நேரத்தையும் பார்த்து பயப்பட்டு, இப்படிப்பட்ட விஷயங்களை செய்வது வீணானது.''
*******************************************************************************

Tuesday 8 July 2008

குஞ்சு பாப்பாக்கு போலர் கரடி veedio

http://www.youtube.com/watch?v=xZ6zJrnJNCo

வாழ்கையில் ஒரு நாள் பாகம் 1

இன்று ஒரு நல்ல நாள் . எப்படி இருக்கும் இந்த நாள் இன்னு எண்ணி எண்ணி பயத்துடன் வாழுவதை காட்டிலும் என்ன ஆகிவிடும் இன்னு சொல்லி மனோ பலத்துடன் வாழ பழகிக்கணும் அது தான் எப்பவும் நம்மை முன் நோக்கி வெற்றி பாதையில் அழைத்து செல்லும் . சில நேரங்களில் உடல் ஊனம் உள்ளவர்கள் மிக உயர்ந்த செயல்களை செய்து முடிப்பார்கள். அது அவர்களின் மனோபலம் எப்படி என்பதை எடுத்து காடடும்.

இன்று இளம் வயதினர் உயர்ந்த பதவிகளில் இருபார்கள் . அதிகம் சம்பாதிபார்கள் ஆனால் வாழ்கையில் ஒரு சின்ன ஏமாற்றம் இன்னா தாங்கும் சக்தி குறைவா இருக்கும். அதனால் தீய பழக்கம் நாடி செல்வார்கள் . அது அப்படீயே போனால் அந்த பழ காதுக்கு மாறி விடுவார்கள் . அதனால் வாழ்க்கை அனுபவம் என்பது வேறு தொழில் அனுபவம் என்பது வேறு. வாழ்க்கை என்பது வாழ்ந்து அனுபவபடால் மட்டுமே கிடைக்க கூடியது. பயப்படாமல் வாழ பழகுங்கள்.

குஞ்சு பாப்பா வீடியோகள்

http://ishare.rediff.com/filevideo.php?id=364457