Wednesday 29 October 2008

இந்தியக் கூட்டமைப்பு உடைவதற்கான காரணிகள் -Webeelam article

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான எழுச்சி தினம் தினம் புதிய பரபரப்புகளை உருவாக்கி வருகின்றது. மதிமுகவின் தலைவர் வைகோ, பொருளாளர் கண்ணப்பன், திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர் போன்றோர் "இந்திய இறையாண்மைக்கு" எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகின்ற ஒவ்வொரு முறையும் அதற்கு எதிரான சக்திகளும் சுறுசுறுப்பாக செயற்படத் தொடங்கும். ராஜீவ்காந்தி கொலையில் இருந்து இந்திய ஒருமைப்பாடு வரை பேசி மக்களுக்கு பூச்சாண்டி காட்ட முற்படும். இம்முறையும் அப்படியே நடக்கிறது.

 

தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு உயர்ந்த ஒரு இடம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். பல்வேறுபட்ட கருத்துக் கணிப்புகளின் ஊடாக வெளிக்கொணரப்பட்ட உண்மை இது. தமிழீழத்திற்கும், தமிழீழ மக்களுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், தமிழீழத் தேசியத் தலைவருக்கும் உணர்வுபூர்வமான ஆதரவை தமிழ்நாட்டு மக்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

 

இவற்றைக் கண்டு பதறியடித்துப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவர் தங்கபாலு, அதிமுகவின் ஜெயலலிதா, பிஜேபியின் ராதகிருஸ்ணன், இந்து முன்னணியின் ராமகோபாலன், மற்றும் துக்ளக் சோ, இந்து ராம், சுப்ரமண்யசுவாமி என்று எல்லொரும் கச்சை கட்டிக் கொண்டு அறிக்கை விடத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழின உணர்வாளர்களை கைது செய்யும்படி கலைஞரின் அரசு மீது இவர்கள் அழுத்தத்தை பிரயோகிக்கிறார்கள்.

 

தமிழீழத் தனியரசு உருவானால் தமிழ்நாடும் பிரிந்து போய் விடும் என்று இந்தியாவின் பார்ப்பனிய சக்திகள் நீண்ட காலமாகவே பரப்புரை செய்து வருகின்றன. ஆனால் இது ஒரு அர்த்தமற்ற வாதமாகவே இருக்கிறது. இந்தியாவின் மாநிலங்கள் தனி நாடு ஆவதற்கான காரணிகள் போதுமான அளவு இந்தியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே இருக்கின்றன. அந்தக் காரணிகளுக்கும் தமிழீழத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. யார் விரும்புகிறார்களோ, இல்லையோ இந்தியா இன்னும் 50 ஆண்டுகளுக்குள் பல தனிநாடுகளாக மாறிவிடும் என்று சொல்வதற்கு வலுவான காரணங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு முக்கிய காரணங்களைப் பார்ப்போம்.

 

இந்தியாவில் இன்றைக்கு தேசியக் கட்சிகள் என்று சொல்லக் கூடிய கட்சிகளாக இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதாக் கட்சியுமே அவைகள். இந்த இரண்டு கட்சிகளும் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன.

 

ஆனால் இன்றைக்கு இந்த இரண்டு தேசியக் கட்சிகளையும் விட இந்தியாவின் மாநிலங்களில் உள்ள அந்தந்த மாநிலக் கட்சிகள் பலம் மிகுந்த கட்சிகளாக வளர்ந்து வருகின்றன. காங்கிரசும் பிஜேபியும் மூன்றாம் இடத்தில் கூட இல்லாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தேசியக் கட்சி என்று தன்னைச் சொல்லிக் கொள்கின்ற காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து போய் தனிக் கட்சி கண்டவர்களும் இன்றைக்கு மாநிலங்களையே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.

 

மாநிலக் கட்சிகள் பலம் பெற்று வருவதை கடந்த தேர்தல்களின் பெறுபேறுகளில் இருந்து சுலபமாக புரிந்து கொள்ள முடியும். 1951இல் நடந்த இந்தியாவின் முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 400இற்கும் மேற்பட்ட இடங்களை தேசியக் கட்சிகள் கைப்பற்றிக் கொள்ள, வெறும் 34 இடங்களையே மாநிலக் கட்சிகள் பெற்றன. ஆனால் இன்றைய நிலையில் மாநிலக் கட்சிகள் பெரும் வளர்ச்சியடைந்து நிற்கின்றன.

 

1991ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 350 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 190 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் பெற்றன. 1996ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஏறக்குறைய 300 இடங்களை தேசியக் கட்சிகள் பெற்றுக் கொள்ள, 240 வரையான இடங்களை மாநிலக் கட்சிகள் சுயேட்சைகளும் சேர்ந்து பெற்றன. 1999 தேர்தலில் பாரிய வித்தியாசம் இல்லையென்றாலும் மாநிலக் கட்சிகள் மேலும் சில இடங்களை அதிகமாகக் பெற்றுக் கொண்டன.

 

கடைசியாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் 283 இடங்களை தேசியக் கட்சிகள் பெற, மாநிலக் கட்சிகளும் சுயேட்சைகளும் 260 இடங்களைப் பெற்றுள்ளன. வெறும் 34 பேரோடு ஆரம்பித்த கணக்கு இன்றைக்கு 260 இடங்கள் வரை வந்து நிற்கின்றது.

 

சிலர் இந்தியாவின் கம்யூனிசக் கட்சிகளையும் தேசியக் கட்சிகளின் பட்டியலுக்குள் சேர்ப்பர். ஆனால் இந்தக் கட்சிகளும் மேற்கு வங்கம் போன்ற ஒரிரு மாநிலங்களில் மட்டுமே பலமாக இருக்கின்றன. அந்த மாநிலங்களை தாண்டி மற்றைய மாநிலங்களில் அந்தக் கட்சிகள் வலுவாக இல்லை. இந்தக் கட்சிகள் தமது கம்யூனிசக் கொள்கைகளை விட தாங்கள் ஆளுகின்ற மாநிலத்தின் நலன்களை முன்னிலைப்படுத்துவது இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.

 

இந்த வகையில் மாநிலங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு போகின்றன. தேசியக் கட்சிகள் என்று சொல்லப்படுகின்ற காங்கிரசும், பிஜேபியும் பலமிழந்து, மாநிலக் கட்சிகளின் தயவில் நிற்க வேண்டிய நிலை ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் உருவாகி வருகின்றது.

 

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரசிற்கும் பிஜேபிக்கும் நடக்கின்ற போட்டி என்று ஒரு புறம் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் நடக்கன்ற போட்டியாக மாறிவிட்டது. வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலக் கட்சிகள் மேலும் அதிக இடங்களை பெற்றுக் கொள்ளும் என்று உறுதியாக சொல்லலாம்.

 

இப்படி மாநிலக் கட்சிகள் பலம் பெற்று ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கத் தொடங்குகின்ற பொழுது, மாநிலங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற பிரச்சனைகள் இந்தியாவை பல தனிநாடுகளாக உடைந்து போக தூண்டும். மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் மாநிலக் கட்சிகள் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி பேச்சுவார்த்தை மூலம் தனித் தனி நாடுகளாக தமது மாநிலங்களை ஆக்கிக் கொள்ளும்.

 

இந்தியத் தேசிய உணர்வு நீர்த்துப் போய், மொழித் தேசிய உணர்வை மாநில நலன் சார்ந்த பிரச்சனைகள் மேலும் ஓங்கச் செய்யும். இதில் தண்ணீர் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கும். வரும் காலத்தில் தண்ணீரால் ஏற்படக் கூடிய பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்ப்போம்.

 

உலகின் மூன்றில் இரண்டு பாகமாக தண்ணீராக இருக்கின்றது. ஆனால் 96.5 வீதமான தண்ணீர் உப்புநீராக மனிதனுக்கு பிரயோசனம் அற்றுக் கிடக்கிறது. மிகுதி 3.5 வீதத்தில் கூட 1.8 வீதமான தண்ணீர் மனிதனுக்கு பிரயோசனப்படாதவாறு ஐஸ் கட்டியாக உறைந்து போயிருக்கிறது. ஆகவே 1.7 வீதமான தண்ணீரே மனிதனால் பயன்படுத்தப்படக்கூடிய நிலையில் இருக்கின்றது.

 

அதிகரித்து வரும் மக்கள் தொகையின் எண்ணிக்கையால் நீரின் தேவையும் அதிகரித்து வருகின்றது. சில நாடுகளின் நீரின் விலை எண்ணையின் விலையை தாண்டிப் போய் விட்டது. நீர்ப் பற்றாக்குறையால் ஆண்டு தோறும் 5 மில்லியன் மக்கள் உலகில் இறக்கின்றார்கள் என்பதில் இதில் ஒரு அதிர்ச்சிகரமான செய்தி. இன்றைக்கு எண்ணைய்க்காக நடக்கும் யுத்தங்கள் போன்று வரும் காலத்தில் நீருக்காக யுத்தங்கள் நடக்கும் என்று பல நிறுவனங்கள் எச்சரிக்கின்றன. மனிதனால் நீர் இல்லாமல் உயிர் வாழ முடியாது. நீர்ப் பற்றாக்குறை என்பது மனிதனை எந்தச் செயலையும் செய்யத் தூண்டும்.

 

மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவிலேயே மக்கள் தொகை வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகின்றது. 2050இல் 200 கோடியை இந்திய மக்களின் தொகை தாண்டி விடும் என்று சொல்லப்படுகிறது. உலகில் உள்ள குடிநீரில் 4 வீதமான குடிநீர் இந்தியாவில் இருக்கின்றது என்பது இதில் இந்திய ஒருமைப்பாட்டிற்கு சாதகமான செய்தி. ஆனால் இந்த நீர் சில குறிப்பிட்ட மாநிலங்களிலேயே இருக்கின்றது என்பதும், பல மாநிலங்கள் பெரும் நீர்ப் பற்றாக்குறையில் திணறிக் கொண்டிருப்பதும் இதில் பாதகமான செய்தி.

 

2050இல் 200 கோடியை இந்திய மக்கள் தொகை தாண்டுகின்ற பொழுது நீர் வளம் உள்ள மாநிலங்களே நீருக்காக திண்டாட வேண்டி வரும். இவற்றை விட நீர் வளம் பொருந்திய மாநிலங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை அமைத்து நீரைச் சுரண்டத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் தொகையும் பெருகி, இருக்கின்ற நீர்வளத்தையும் பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டி விட, மற்றைய மாநிலங்களோடு தற்பொழுது பகிர்ந்து கொள்கின்ற சிறிய அளவிலான நீரைக் கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.

 

சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநில அரசு அயல் மாநிலங்களுடன் செய்து கொண்ட நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை அதிரடியாக ரத்து செய்தது. அரியானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் இதனால் பாதிக்கப்பட்டன. எததனையோ நடுவர் மன்றங்கள் அமைத்தும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரைக் கொடுக்க மறுக்கின்றது. ஆந்திராவிற்கும் கர்நாடகத்திற்கும் நதிநீர் பிரச்சனை இருக்கின்றது. இப்படி ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையில் இந்த நீர்ப் பிரச்சனை இருக்கின்றது.

 

இந்த நீர்ப் பிரச்சனை இந்தியத் தேசிய உணர்வை இல்லாமல் செய்கின்றன. மாநில தேசிய உணர்வுகள் மேலோங்குகின்றன. மற்றைய மாநிலத்தவர்கள் தமது மாநிலங்களில் குடியேறி தமது வளங்களை சுரண்டுவதாகக் கூட சில இடங்களில் குரல்கள் ஒலிக்கின்றன. மும்பையாக இருக்கட்டும், கர்நாடகமாக இருக்கட்டும், மாநில நலனுக்காக ஒலிக்கின்ற குரல்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலைதான் இன்றைக்கு இருக்கின்றது.

 

நீர்ப் பற்றாக்குறை விரைவில் மிகப் பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்று தெரிந்தும் இந்திய அரசு அதற்கான முன்னேற்பாடுகளில் இறங்கியதாக தெரியவில்லை. மழை நீரை சேகரிக்கின்ற, நதி நீர் கடலில் கலக்காமல் தடுக்கின்ற, கடல்நீரை குடிநீராக மாற்றுகின்ற என்று எந்த ஒரு ஏற்பாட்டிலும் இந்திய அரசு தீவிரமாக இறங்கியதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. மாநில அரசுகளும் இதைப் பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை.

 

தொலைநோக்கு சிந்தனையோடு நீர்ப் பிரச்சனையை தீர்ப்பதற்கு நேரத்தையும் நிதியையும் ஒதுக்குவதை விட்டு விட்டு, இந்திய அரசு சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புகிறது. 1950களில் மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவும், சோவியத் யூனியனும் நிலாவுக்கு ராக்கட் அனுப்பி விளையாட்டுக் காட்டியதை, ஏறக்குறைய 40 ஆண்டுகள் கழித்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து இந்திய அரசு செய்கிறது. இந்தியாவும் நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது என்கின்ற ஒரு பெருமையை தவிர, இதில் அப்படி என்ன வரப் போகிறது என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இந்தப் பெருமை இந்திய தேசிய உணர்வை தற்காலிகமாக கட்டிக் காக்கும் என்று இந்திய அரசு கணக்குப் போடக் கூடும்.

 

சச்சின் டெண்டுல்கரும், நிலாவில் இந்திய ராக்கட்டும் தண்ணீர் பிரச்சனையின் முன்பு எதுவுமே இல்லாமல் போய்விடும். தண்ணீர் பிரச்சனையில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், கடைசியில் இந்தியா பல நாடுகளாக உடைந்து போவதை தடுக்க முடியாது. இப்படி இந்தியா உடைவதற்கான காரணிகள் இந்தியாவிற்கு உள்ளேயே இருக்கின்றன. அதற்கு தீர்வு காண்பதை விட்டு விட்டு வேறு இடங்களில் இந்திய அரசு காரணத்தை தேடுகிறது. பொய்யான கற்பிதங்களை செய்கிறது.

 

கடைசியாக ஒன்றைச் சொல்ல வேண்டும். வரும் காலத்தில் மாநிலக் கட்சிகள் மேலும் பலம் பெற்று, மாநில உணர்வுகள் இன்னும் மேலோங்கி, தண்ணீர் பிரச்சனையும் பூதாகரமாக மாறி இருக்கின்ற நிலையில், "இந்தியாவோடு இருந்த காரணத்தால் எங்களால் தமிழீழ மக்களுக்கு உதவ முடியவில்லையே" என்ற வேதனையான உணர்வும் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்குமாயின், அது இந்தியா உடைவதை மேலும் துரிதப்படுத்துமே தவிர, குறைக்காது.

 

- வி.சபேசன்

LTTE and IPKF analysis and articles

 
This link having lots of good material regarding tamil eelam events during IPKF occupation.

Wednesday 22 October 2008

Getting good Tamil writings in this blog

http://ukumar.blogspot.com/2006_06_01_archive.html

சுஜாதா-'கற்றதும் பெற்றதும்' பகுதியில்

தனது 70ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் சுஜாதா அவர்கள் எழுதியது:
மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது. இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன். மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும் என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள். ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர். சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
"யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க, பார்க்கலாம்!" என்று கண் சிமிட்டலுடன் கேட்டார். நான் யோசித்து, ''கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ" என்றேன்.

"எதுக்குப்பா?"

"தொடுங்களேன்!"

சற்று வியப்புடன் தொட்டார்.

"மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!" என்றேன். ''இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன?'Õ என்று, விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.

"ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து... பாத்து..."

"இது என்னப்பா ட்ரிக்கு?" என்று அப்படியே செய்தார்.

"உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!" என்றேன்.
அசந்து போய், "கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?"
"ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில், இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன் னீங்க. மறந்துட் டீங்க!" என்றேன். தாத்தா மாதிரி அத்தனை மோசம் இல்லை என்றாலும், எனக்கும் சமீபத்திய ஞாபகங்கள் சற்றே பிசகுகின்றன. ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்குச் சென்றால், எதற்காக வந்தோம் என்பது மறந்தே போகிறது. பெயர்கள் ஞாபகம் இருப்பதில்லை. ஆந்தைக்கு இங்கிலீஷில் என்ன என்று சட்டென நினைவு வருவதில்லை. 'படையப்பா'வில் ரஜினிக்கு முன்னால் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாரே... அந்த நடிகை யின் பெயர் என்ன என்று ஒரு நாள் அதிகாலை கண் விழித்ததும், ஒரு மணி நேரம் யோசித்தேன், கிட்டவில்லை.

மனைவி எழக் காத்திருந்து அவளிடம் கேட்டேன். "ரம்யா கிருஷ்ணன்" என்றாள். இம்மாதிரி, நியூரான்கள் களைத்துப் போவது தெரிகிறது. ஆனால், நீண்ட நாள் ஞாபகங்கள் பத்திரமாக இருக்கின்றன. அது மூளையில் வேறு பேட்டை போலும்! கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு முன், சின்ன வயசில் கோயமுத்தூரில் அம்மா\அப்பாவுடன் ஜட்கா வண்டியில் "ஜகதலப்ரதாபன்" சினிமா போனது, ஒண்ணாம் கிளாஸ் டீச்சருக்கு ஆனந்த விகடனும், அமிர்தாஞ்சனும் கொண்டு போய்க் கொடுத்தது, பள்ளி மணியை அகாலமாக அடித்தது, எனக்குத் தம்பி பிறந்தது... இதெல்லாம் தெளிவாக ஞாபகம் உள்ளது. ஸ்ரீரங்கத்துக் கதைகள் அனைத்தும் என் நீண்ட நாள் ஞாபகங்களின் வடிவம்தான்!

டெல்லியில், பெட்ரோல் எழுபத்தைந்து பைசாவும், பால் ஐம்பத்தைந்து பைசாவும் கொடுத்து வாங்கி தாராளமாக வாழ்ந்தது, என் முதல் கதை, முதல் நாவல் பிரசுரமானது, எஸ்.ஏ.பி'யின் கடிதக் குறிப்பு எல்லாம் ஞாபகம் உள்ளது. ரம்யா கிருஷ்ணன் போன்ற மேட்டர்தான் சட்டென்று வழுக்கிவிடுகிறது.
மெரீனாவில், ஷார்ட்ஸ் ஸ்னீக்கரில் ஓடும் இளைஞர்களைப் பார்த்து முன்பு பொறாமைப்படுவேன். இப்போது புன்னகைக்கிறேன். பொதுவாகவே, பொறாமைப்படுவதற்கான விஷயங்களும், அதட்டிச் சொல்வதற்கான விஷயங்களும் குறைந்து வருகின்றன. ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கையில், இறந்தவர் என்னைவிட சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், 'பரவால்லை... நாம தப்பிச்சோம்!' என்றும், பெரியவ ராக இருந்தால் கழித்துப் பார்த்து, 'பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்குÕ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல் லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில் லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God!
சயின்ஸ் அதிகம் படித்ததால், கடவுளைப் பற்றிய குழப்பங்கள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. யேட்ஸ் சொன்னதுபோல், "சிலர் கடவுள் இருக்கிறார் என்கிறார்கள். பிறர் கடவுள் இல்லை என்கிறார்கள். உண்மை ஒருக்கால் இரண்டுக்கும் இடையில் எங்கோ இருக்கிறது!".
ஆனால், டி.என்.ஏ. ரகசியத்தையும், உயிரின வேறுபாடுகளையும், அண்டசராசரங்களின் அளவையும் பார்க்கும்போது, நம்மை மீறிய சக்தி புலன் உணர்வுக்கும், நம் அற்ப வார்த்தைகளுக்கும் அகப்படாத ஒரு சக்தி இருப்பதில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது. நான் நாத்திகன் அல்ல. மிஞ்சிப்போனால், ரஸ்ஸல் படித்தபோது 'அக்னாஸ்டிக்'காக அதாவது, கடவுள் இருப்பைப் பற்றித் தெரியாதவனாக இருந்திருக்கிறேன். மறுபிறவியில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிறந்தால் இதே ஞாபகங்கள், இதே முதுகுவலியுடன் தமிழ்நாட்டில் பிறக்க வேண்டும். தமிழில் மீண்டும் கதைகள் எழுத வேண்டும். நடக்கிற காரியமா? முற்றிலும் புதிய பிறப்பு, தேசம், பெயர், உடல் என்றால் அது மறுபிறவி அல்ல... வேறு பிறவி. மேலும், எங்கேயாவது ஸ்விஸ் நாட்டில் பிறந்து வைத்தால், பாஷை தெரியாமல் கஷ்டப்படுவேன்.
இறந்ததும் என்ன ஆகிறது என்பதைப் பற்றி நசிகேதனைப்போல யோசிக்கும் போது, சட்டென்று ஒரு திடுக்கிடல் ஏற்படும். அந்தச் சமயத்தில் மல்லிகை வாசனையையோ, ஒரு குழந்தையின் புன்சிரிப்பையோ எண்ணிப் பார்த்துக் கவனத்தைக் கலைத்துக்கொள்வேன். சொர்க்கம், நரகம் இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இரண்டும் இங்கே தான் என்று எண்ணுகிறேன். அப்படி ஒருக்கால் இருந்தால், நரகத்துக்குப் போகத்தான் விரும்புகிறேன். அங்கே தான் சுவாரஸ்யமான ஆசாமிகள் இருப்பார்கள். சொர்க்கத்தில், நித்ய அகண்ட பஜனைச் சத்தம் எனக்கு ஒரு நாளைக்கு மேல் தாங்காது.

ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படி யாகத் திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப் பட்டு, எழுபது வயதில் காலை எழுந் தவுடன் சுகமாக பாத்ரூம் போனாலே சந்தோஷப்படுகிறேன். வாழ்க்கையே இவ்வகையில் progressive compromises (படிப்படியான சமரசங்களால் ஆனது).

இன்றைய தினத்தில், என் டாப்டென் கவலைகள் அல்லது தேவைகள் என்றால்... முதலிடத்தில் உடல் நலம், மனநலம், மற்றவருக்குத் தொந்தரவு கொடுக்காமல் இருப்பது, தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண் படுத்தாமல் இருப்பது, இன்சொல், அனுதாபம், நல்ல காபி, நகைச்சுவை உணர்வு, நான்கு பக்கமாவது படிப்பது, எழுதுவது போன்றவை பட்டியலில் உள்ளன. பணம் அதில் இல்லை. முதலிலேயே அது லிஸ்ட்டை விட்டுப் போய்விட்டது.

தி.ஜானகிராமனின் "கொட்டு மேளம்" கதையில் வரும் டாக்டருக்குப் போல, மனைவி அவ்வப்போது வர வேண்டிய பணத்தையும், ஏமாற்றிய ஜனங்களை யும் எனக்குச் சொல்லிக் காட்டுவாள். அவளும் இப்போது இதில் பயனில்லை என்று நிறுத்திவிட்டாள். பணம் பிரதானமாக இல்லாததால், இன்று எழுபது வயசில் மனச்சாட்சி உறுத்தாமல் வாழ முடிகிறது. ஜெயிலுக்குப் போன தில்லை. ஒரே ஒரு தடவை டில்லியிலும், ஒரு தடவை பெங்களூரிலும் ஒன்வேயில் ஸ்கூட்டர் ஓட்டியதால், மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டுக்குப் போயிருக்கிறேன். வோட்டிங் மெஷினுக் காக சாட்சி சொல்ல, கேரளா ஹைகோர்ட் டில் இருந்து சுப்ரீம் கோர்ட் வரை போயிருக்கிறேன்.
அம்பலம் இணைய (www.ambalam.com) இதழில் ஒரு வாசகர் கேள்வி கேட்டிருந்தார்... "நாற்பது வருஷ மாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர் கள்?" என்று.
நீண்ட யோசனைக்குப் பிறகு பதில் அளித்தேன்... "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!" என்று. என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக் கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். 'ரோஜா' வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், 'அரவிந்த சாமியுடன் என்னை மண முடி!' என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், 'பாலம்' கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

சுஜாதா - நன்றி: ஆனந்த விகடன்

இருவரும் தோழர்களே

உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே......

-சேகுவேரா

Tuesday 21 October 2008

காமசூத்திரம் கேள்வி பதில் ரொம்ப சூப்பர்

http://www.geocities.com/eegaraisiva/sivi/sivi/index.html

நக்க முக்க நாக்க முக்க

இந்த பாடல் தமிழ் பாடல் இன்னு சொல்லுறது பெருமை யா இருக்குது .

http://www.writerpara.net/archives/238
http://www.sanakannan.com/

அஜீத் - மனம் திறந்த பேட்டி

"நான் கஷ்டப்பட்டு முன்னேறினேன். உண்மைதான். ஆனால் அதை வெளியில சொல்லிக்கிட்டு அனுதாபம் தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏன்னா இங்கே தனது சுய உழைப்பாலே முன்னேறியவர்கள் என்னைத் தவிர எக்கச் சக்கமானோர் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் என்ன சொல்லிக் கொண்டா இருக்கிறார்கள் என்று அவர் கேட்டது" ஒரு சபாஷ் போட வைத்தது.

Tuesday 14 October 2008

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் ?

மரியசார்லஸ்நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப்படுத்திக் கொள்கிறோம். விவேகமுள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம். நிறையபேர், நட்பில், காதலில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மயில் நீங்கள் திருப்திபடுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாதுஜேனட்லூர் என்பவருடய 'Simple Loving' என்ற புத்தகத்திலிருந்து சில இங்கே....உங்கள் அன்பு நன்கு மலர்ந்து நிலைத்திருக்க வேண்டுமெனில் மற்றவருக்கு உகந்த வகையில் நான் நல்லவனாக இருக்கவேண்டும். மிகுந்த ஆர்வம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, உங்கள் மீதே மரியாதை கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையையும், செயல்களையும் மகிழ்ச்சியாக, உற்சாகமாக செய்யுங்கள்.உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்துவிட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும். மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது. உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப்போகும் அத்தன பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது. நான் செய்யக் கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்ன மாற்றிக் கொள்வதுதான். பிறகு அவர்கள் விருப்பம். ஆனால், வாழ்க்கையில் எனக்குப் பிடித்த மனிதனாக நான் மாற நிறைய காலம் பிடிக்கிறது.உங்கள் மனப்பான்மையைப் பொறுத்துத்தான், உங்கள் உறவு நீடிக்குமா? அல்லது காற்றில் கரந்த கற்பூரம் போலாகுமா? எனச் சொல்ல முடியும்.சரி, மனப்பான்மை என்றால் என்ன?உங்களைப் பற்றி, மற்றவர்களைப் பற்றி, உங்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களப் பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்துக்கள் நாளடைவில் உங்கள் நம்பிக்கையாக மாறிவிடுகிறது. உங்களின் தீர்மானமான உணர்வுகள் நிரந்தர நிழலாய் மனதில் படிந்து விடுவதுதான் மனப்பான்மை.உங்கள் உறவுகளின் அஸ்திவாரமான மனப்பான்மை எவ்வாறு உருவாகிறது?நேற்றைய வார்த்தைகள் இன்றைய செயல்கள்இன்றைய செயல்கள் நாளைய மனப்பான்மைகள்இன்றய மனப்பான்மைகள் நாளைய குணங்கள்இன்றய குணங்கள் தாம் அவருடய நாளைய விதி!எனவே ஆரோக்கியமான, வளர்ச்சியடையக்கூடிய மனநிலையை நாம் வளர்த்துக் கொண்டோம் என்றால் உறவுகள் இலேசில் புளித்துப் போகாது. ஐஸ்கிரீம் கலந்த அன்பு பேச்சுகள் எளிதில் அலுத்துப் போகாது. ஆரோக்கியமான மனநிலைக்கு அடிப்படையே, நாம் நாமாக இருப்பதுதான்.கோபென்ஹெகன் பல்கலக் கழகத்தின் இயற்பியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. 'ஒரு பெரிய வானளாவிய கட்டிடத்தின் உயரத்தை ஒரு பாரோமீட்டர் உதவியுடன் எப்படிக் கணக்கிடுவது? உடனே ஒரு மாணவன் எழுந்து சொன்னான். பாரோமீட்டர் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி விட்டு அதை மெல்ல இறக்கவும். கயிற்றின் நீளம்+பாரோமீட்டர் நீளம்-இவயிரண்டயும் சேர்த்தால் கட்டடத்தின் உயரம் தெரியும். அந்த மாணவன் பெயிலாக்கப்பட்டான். எனினும் தனித்தன்ம வாய்ந்த பதிலைக் கூறிய அந்த இளஞன் சோர்ந்துவிடவில்ல. தாமாகவே பிரச்னகளுக்குத் தீர்வு கண்டு வந்த அவரின் பெயர் தான் நீல்ஸ்போர். இயற்பியலுக்காக நோபல் பரிசு வாங்கிய ஒரே டேனிஷ் நாட்டவர். தனித்தன்மையுடன், இயல்பாக இருப்பதுதான் நாளடைவில் பெரும் வெற்றிகளைப் பெற்றுத் தரும்.ஒரு நாள் இரண்டு நண்பர்கள் கடலில் படகு ஓட்டி சென்றார்கள். பெரியவர் ஜிம் படகை ஓட்ட, சிறியவர் ரே, ஒரு முனையில் நின்று கொண்டு இயற்கை அழகை ரசித்துக் கொண்டு வந்தார். அன்றிரவு இருவரும் உணவருந்தும் போது ரே கேட்டார், ஜிம் காலையில் நாம் சென்ற கடற்கரைப் பகுதியில் நூற்றுக்கணக்கான பாறைகள், கோர புற்கள் இருந்தனவே? எப்படிக் ஒன்றில் கூட மோதாமல் ஓட்டினீர்கள்? ஜிம் புன்னகைத்துக் கொண்டே சொன்னார், அங்குள்ள ஒவ்வொரு பாறையையும் நான் இடித்துப் பழகி விட்டேன்!வாழ்க்கையில் நாம் படும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் பாடங்களைக் கற்றுக் கொள்வதோடு, அத்தகைய வாழ்க்கை முறையிலிருந்து ஓடிவிடாமல், அதையே சிறப்பாக வாழ கற்றுக் கொள்பவர்தாம் சிறந்த மனிதர். நம்முடன் வாழ்பவர்களுக்கு வாழ்க்கை சுலபமாக அமையக் கூடும். நமக்கிருப்பது போன்ற துன்பங்கள் அவருக்கு வராமல் இருக்கக்கூடும். ஆனால் தொடர்ந்து போராடி வெற்றி பெறுங்கள். பிறகு உங்களுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசங்கள நீங்கள் உணர்வீர்கள்; கொஞ்ச காலத்தில் மற்றவர்களும் உணர்வார்கள்.
நன்றி - www . ezilnila . com -

Thursday 9 October 2008

ஆத்மாவை திற ஆனந்தம் போஅங்கடும்

எழுத்தாளர் ஒருவர், ஜென் ஞானியிடம் கேட்டார்:
``ஞானமடைந்துவிட்டால் ஒருவருடைய எல்லா பிரச்னைகளுமே தீர்ந்துவிடுமா? அவரின் எல்லா குறைகளுமே நிறைகளாகிவிடுமா?''
அப்போது அவரிடம், ``எல்லா பிரச்னைகளும் சரியாகிவிடவேண்டும் என்பது நிஜத்திற்கு ஒத்துவராத பேராசை. எல்லா குறைகளும் நிறைகளாகிவிடவேண்டும் என்பதும் உண்மைக்கு ஒத்துப்போகாத கோரிக்கை'' என்று ஞானி சொன்னதும்,
``ஞானமடைந்தாலும் எந்தப் பிரச்னையும் சரியாகாதா?'' என்று எழுத்தாளர் ஆச்சரியமாய் கேட்டார்.
அதற்கு ஜென் ஞானி மிக அழகாய் பதில் சொன்னார்,
``பிரச்னைகளே இல்லாமல் வாழ்வதற்கு ஞானம் தேவையில்லை. எல்லா பிரச்னைகளோடும் வாழ்வதற்குத்தான் ஞானம் தேவை. எல்லாம் நிறைவாய் இருந்தால் முட்டாள்கூட ராஜாவாயிருக்க முடியும். எல்லாக் குறைகளையும் அனுசரித்து ஆனந்தமாய் வாழத்தான் ஞானம் தேவை.''வரலாற்றை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் மேற்சொன்ன ஜென் கதையின் ஆழமான தாத்பரியம் புரிய வரும்.
கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு தியான சத்சங்கத்தில் குறிப்பிட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.
``10 வயதுக் குழந்தைக்கு 10ஆவது புத்தகம் புதிராய் இருக்கும். காரணம், புரியாத எதையும் `புதிர்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
சுதந்திரப் பறவையாய் சுற்றித் திரியும் இளம் உள்ளத்திற்கு குடும்பம், வீடு, தொழில், சமுதாயம் என்ற எல்லாமே எதிர்காலத்தில் வரஇருக்கும் பெரிய பொறுப்பாய்த் தெரியும். எதிர்காலம் பயமாயிருக்கும்.
காரணம், புதிதான எதையும் `பயம்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
`எனது வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்வேன்' என்று வாழ ஆரம்பித்தவர்களுக்கு, தங்களின் விருப்பப்படி முழுமையாய் வாழ முடியாதபோது தங்களிடம் பல குறைகள் இருப்பதாகத் தெரியும்.
காரணம், இயலாமைகளை `குறைகள்' என்று மனம் மாற்றிக்காட்டும்.
யாருடைய வாழ்விலும் புதிர்கள் இல்லவே இல்லை. மனத்தால் மாற்றிக் காட்டப்படும் மாயங்கள்தான் இவை.''
``மாயமானாலும் நிஜமானாலும் எப்படி விடுபடுவது'' என்று கேட்டபோது, அவரிடம் சொன்ன பதிலை இங்கு குறிப்பிடுகிறோம்:
மூன்று முக்கியமான தியான சூத்திரங்கள்:
தியான சூத்திரம் 1 : புரியாத வரைதான் புதிர்.
புரியாத ஒவ்வொன்றையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.
தியான சூத்திரம் 2 :
புதிதாய் தெரியும் எதையும் விட்டு வைக்காதீர்கள். புதிய துறை, புதிய மனிதர்கள், புதிய சூழல் என்று உங்களின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் எதையும் விட்டுவைக்கும் வரைதான் அவை உங்களை பயமுறுத்தும்.
தியான சூத்திரம் 3 :
இயலாமைகளைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி, உங்களிடம் இருக்கும் பலங்களைப் பார்த்து உற்சாகம் பொங்க வாழ ஆரம்பித்தாலே நிறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
குறைகளால் நின்ற வாழ்வு,
நிறைகளால் துள்ளிக் குதித்து ஓட ஆரம்பிக்கும்..
(ஆனந்தம் பெருகும்)
ஆத்ம தியானம்
உங்களின் பலவீனம்தான் உங்களுடைய வாழ்வின் திருப்புமுனை. பலவீனத்தை விட்டு வைத்தால் அது மேலும் மேலும் உங்களை பலவீனப்படுத்தும். பலவீனத்தைத் தாண்டி உழைத்தால் அது மேலும், மேலும் உங்களை பலப்படுத்தும்.
வாழ்வில் ஜெயித்தவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களை பலமாக்கியவர்கள். வாழ்வில் தோற்றவர்களெல்லாம், தங்களின் பலவீனங்களை பலமாக்காமல் விட்டுவிட்டவர்கள். பலவீனங்களை பலமாக்குங்கள். பலம் வாய்ந்தவராவீர்கள்.

Wednesday 8 October 2008

டீன்ஏஜ் பற்றி மனநல மருத்துவர் ஷாலினி இன் குமுதம்

டீன்ஏஜ். யாரும் சரியாக புரிந்துகொள்ள முடியாத வயசு. இந்த வயதில் வரும் முக்கியமான பிரச்னைகள் என்ன, அவற்றைச் சமாளிப்பது எப்படி என்று சொல்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.
படிப்பில் வீக்:
``அஞ்சாம் கிளாஸ் வரைக்கும் அவ்வளவு சூப்பரா படிச்ச பிள்ளை தான், என்னன்னே தெரியல, வர வர படிப்புல ரொம்ப வீக்காயிட்டே போய், மார்க்கெல்லாம் சொல்லிக்கிறா மாதிரியே இல்லை'' என்ற புகாருடன் வரும் பெற்றோர்களின் எண்ணிக்கைதான் மிக அதிகம். குழந்தையை அழைத்து விசாரித்தால், ``எவ்வளவு படிச்சாலும் மறந்து போயிடுது'' என்கிறார்கள். அல்லது, ``புக்கைத் திறந்தாலே, பகல் கனவா வருது'' என்கிறார்கள். பரிசோதித்துப் பார்த்தால் அநேக குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருந்தாலும், வெறுமனே மனப்பாடம் செய்து, அர்த்தமே புரியாமல் படிக்கும் பாணி தெரியவரும். இந்த `டப்பா அடிக்கும்' பாணி எல்லாம் சின்ன கிளாஸ் சிம்பிள் பாடங்களுக்கு ஓகே. ஆனால் பெரிய கிளாஸ் போகப் போக, பாடங்களின் ஆழம் அதிகம், புரிந்துகொள்ள வேண்டிய மேட்டரின் அகலமும் அதிகம் என்பதால், இந்த மனப்பாட யுத்தி அதற்கு மேல் பிரயோஜனமே படாது.
புரிந்து, படித்து, கிரகித்துக்கொள்ளும் யுத்திகளைத் தெரிந்துகொண்டாலே, அநேக மாணவர்கள் படிப்பில் முன்னேறி விடுவார்கள். இப்படிப் படிக்க அவர்களை பழக்கப்படுத்தவேண்டும்.
ஓவர் டென்ஷன்:
டீன்ஏஜ்காரர்கள் பற்றிய அடுத்த புகார், இந்த முன்கோபம். அதுவரை சொல் பேச்சைக் கேட்டு, அமைதியாய் வளைய வந்த பிள்ளைகள், பருவ வயதைத் தொட்ட உடனே, ``எல்லாம் எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்''என்று பெற்றோரையே எதிர்த்துப் பேசிவிடுகிறார்கள்.
இந்த வயதில் இந்த இளைஞர்களின் ரத்தத்தில் எக்கச்சக்க ஹார்மோன்கள் பிரவாகமாய் சுரக்கின்றன. அதனால், தொட்டதற்கெல்லாம் டென்ஷன், எரிச்சல், மூட் அவுட் என்று இளரத்தம் எப்போதுமே ஒரு சலசலப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும். இதைப் புரிந்துகொண்டு, பெரிசுகள் நாம் மிகப் பக்குவமாய், ஹாஸ்யமாய், தோழமையாய் முக்கியமாய், பொறுமையாய் இவர்களைக் கையாண்டால் தான் ஹார்மோன்களின்ஆக்ரோஷம் தணிந்து அமைதியாவார்கள்.
ஓவர் கூச்சம்:
``விருந்தினர் வந்தால் ஒரு வணக்கம் சொல்வதில்லை; கடைக்குப் போனால், எல்லாரும் பார்க்குறாங்க; நான் இந்தப் பையைத் தூக்கிட்டு வந்தா சிரிப்பாங்க; மத்தவங்க முன்னாடி என்னைப் பத்தி ஏன் சொன்னேனு எல்லாரும் போன பிறகு திட்டுறது...'' இப்படியாக, டீன்ஏஜ் பருவ சிறுசுகளின் வெட்க உணர்வைப் பற்றி நிறைய புகார்கள் வருவதுண்டு. என்ன செய்வது? இந்த வயதில் நேரும் உடல் மாற்றங்கள் இவர்களை பிறர் எதிரில் கூசிப் போகச் செய்கிறது. போகப் போக இந்தக் கூச்சமெல்லாம் குறைந்து, முதிர்ச்சி வர வர தன்னம்பிக்கையும் தானே அதிகரித்து, ``ஆமா, நான் இப்படித்தான், எனக்கு என்னைப் பிடிச்சிருக்கு. வேறு யாருடைய அபிப்ராயமும் எனக்கு முக்கியமில்லை'' என்று சுயமதிப்புக்கொள்ளவும் இவர்கள் முடிகிறது. என்ன இந்த அளவு சுயாபிமானம் வர குறைந்தது நான்கைந்து ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை இந்த வெட்கத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டாலே, தானாய் தெளிந்து விடுகிறார்கள் இளையவர்கள். சகாக்களின் சம்மதம்:
டீன்ஏஜ் பருவத்தினருக்கு தங்கள் சமவயதுக்காரர்களின் அபிப்ராயம் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. அவர்களைப் போலவே இருக்க விரும்புகிறார்கள். இந்த சமவயதுக்காரர்கள் என்ன செய்கிறார்கள், என்ன சொல்கிறார்கள், எப்படி விஷயங்களை அணுகுகிறார்கள் என்பதை எல்லாம் மிக மும்முரமாக நோட்டம் விட்டு, அதைப் போலவே தானும் இருந்தால்தான் தன்னை `செட்டில் சேர்த்துக்கொள்வார்கள்' என்று அரும்பாடுபட்டு, மந்தையோடு மந்தையாய் கலந்துவிட முயல்கிறார்கள். இளையவர்களின் இந்தப் பழக்கத்தை மாற்ற முடியாது. காரணம் மற்றவர்களைவிட இந்த மாதிரி சமவயது நண்பர்களிடமிருந்து அதிக விஷயங்களைக் கற்றுக்கொள்ளும்படியாகத்தான் மனித மூளையின் டிசைனே அமைந்திருக்கிறது. இந்தப் பிரச்னையை சமாளிக்க ஒரே வழி, உங்கள் குழந்தையின் சகாக்களை பரிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். எந்த மாதிரி நண்பர்களுடன் பழக்கம் என்பதை நேரடியாகக் கண்காணித்து தீயவை உள்ளே நுழையாமல் கவனம் செலுத்துங்கள்.
முதல் காதல்:
உண்மை என்ன தெரியுமா? பதிமூன்று வயதில் ஒரு பெண் காதல் வயப்படுவதென்பது வயதிற்கு மீறிய செயலே இல்லை. மனிதன் தோன்றிய காலம் முதல் பெண்களுக்கு முதல் காதல் ஏற்படும் வயதே இதுதான். முதல் காதல் என்றால், இன்னும் நிறைய முறை வேறு காதல் வருமோ என்கிறீர்களா? ஆமாம். உயிர் உள்ள வரை எதிர் பாலினத்தின் மேல் ஈர்ப்பும் அவ்வப்போது காதலும் ஏற்படும்படியாகத்தான் இயற்கைமனிதர்களை வடிவமைத்துள்ளது. அதனால் மகள் காதல் கொண்டு விட்டாளே என்று ஓவராய் பதறாதீர்கள். அந்த வயதில் முதல் காதல் கொள்வது அவள் உடம்பில் ஹார்மோன்கள் நார்மலாய் இருக்கின்றன. அவள் ஒரு நார்மல் பெண் என்பதற்கான அறிகுறி.ஆனால், இது அவளுக்கு முதல் அனுபவம் என்பதால் சினிமாவில் வருவது போல காதல் மஹா அழகான, புனிதமான உணர்வு என்றெல்லாம் அவள் தவறான கற்பனையில் மிதக்கக்கூடும். உடனே அத்தை, மாமி என்று யாராவது ஒரு பெண் உறவினரைப் பிடியுங்கள். அல்லது ஒரு கவுன்சிலரை அணுகுங்கள். முதல் காதல் சொதப்பல்களைப் பற்றி விளையாட்டாகப் பேசி புரியவைத்தாலே. `ஓகோ, இது இந்த வயதில்எல்லோருக்கும் ஏற்படுகின்ற மிகச் சாதாரண ஒரு உணர்ச்சி தான் என்பதை புது இளைஞி புரிந்துகொள்வாள்.
மூட் அவுட்:
டீன்ஏஜ் பருவத்தினர் பலரும் அடிக்கடி மனநிலை மாற்றங்களுக்கு உள்ளாவதால், திடீர் கோபம், திடீர் அழுகை, திடீர், `என்னைக் கண்டாலேயாருக்கும் பிடிக்கல!' மாதிரியான உணர்ச்சிவெடிப்புகள் ஏற்படுகின்றன. மூளையின் நரம்புகள் இந்த வயதில் அதிகமாக வளருவதால் அடிக்கடி சிக்காகி விடுவதாலும், புதிதாய் ரத்தத்தில் ஓடும் ஹார்மோன்கள் இன்னும் ஒருநிலைப்படாததாலும் இந்த வயதுக்காரர்களுக்கு அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆவது சகஜம். பெண் குழந்தைகள், ``என்னை யாருமே புரிஞ்சிக்க மாட்டேன்றாங்க!'' என்று புலம்பி அழுவதும், ஆண்கள் ``என்னைக் கவனிக்கிறதே இல்லை'' என்று எரிந்து விழுவதும் உங்கள் மேல் உள்ள கோபத்தினால் அல்ல, மூளையில் ஏற்படும் ரசாயன ஸ்ருதிபேதத்தினால். அதனால் சிறுசுகளோடு சரிசமமாய் கத்தி சண்டையைப் பெரிதாக்காமல், அந்த நேரத்திற்கு அமைதி காத்து, பிறகு விளக்கம் தந்து புரியவைக்க முயன்றால்தான் குடும்ப நிம்மதியைக் காப்பாற்ற முடியும்.
என்ன இருந்தாலும் டீன்ஏஜ் பருவம் என்பது காட்டாற்று வெள்ளம் மாதிரி ஹார்மோன்கள் எந்தப் பதப்படுத்தலும் இன்றி பச்சையாய் ஓடும் வயது. இந்த வெள்ளத்தை எப்படி அணைகட்டி அமோக விளைச்சலுக்கு ஆட்படுத்துவது என்று சொல்லித்தர யாராவது தேவை. வாழ்வியல் வித்தைகளை சுலபமாக சொல்லித்தரும் ஒரு சீனியரின் ஜாலி டிப்ஸ் இருந்தால் இளைஞர்கள் எப்போதுமே சரியான தடத்தில் இருக்க உதவும்.சும்மா இளைஞர்களை குறை சொல்லிக்கொண்டிராமல் நம்மைப் போன்ற பெரிசுகள் எல்லாம் இப்படிப்பட்ட ஜாலியான சீனியர்களாய் மாறினாலே போதும். டீன் ஏஜ் பருவப் பிரச்னைகளைத் தாண்டி பிரமாதமாய் வெளிவந்துவிடுவார்கள் நம் இளைஞர்கள்..

கார்த்தி ப.சிதம்பரம் இன் குமுதம்

படபடவென, அதே சமயம் தன்னம்பிக்கை துளிர்விடப் பேசுகிறார் கார்த்தி ப.சிதம்பரம். மத்திய நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் மகன். அப்பாவோடு அரசியல் மேடைகளில் தோன்றினாலும், அவ்வப்போது இன்றைய கல்வி முறை பற்றி மேடைகளில் பதிவு செய்யவும் தவறுவதில்லை. குறிப்பாக, குழந்தைக் கல்வி முறை பற்றிய அணுகுமுறையில் நிறைய மாற்றங்கள் தேவை என்கிறார்.
``நாம் குழந்தைகளை நிறைய கட்டுப்படுத்துறோம். அதுவே தப்பு. குழந்தைகளை அவங்க போக்கிலே விட்டுத் தான் வளர்க்கணும்.
இது போட்டி உலகம்தான். நான் மறுக்கல. பெத்தவங்க தங்களால் சாதிக்க முடியாததை சந்ததிகள் சாதிக்கணும்னு அவங்களை வற்புறுத்தறாங்க. இது குழந்தைகளுக்கு பெரிய அழுத்தமா மாறுது.
அடுத்து, சக மாணவர்களோடு குழந்தைகளை ஒப்பிடுதல். இது மிகவும் தவறு. ஒப்பிடுவதால் குழந்தையின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும் ஆபத்துகளே அதிகம்!'' என்று ஒருவித எச்சரிக்கையுடன் சொல்லும் கார்த்தி, வீட்டுப் பாடம் எழுதச் சொல்லி குழந்தைகளை கட்டாயப்படுத்துவதையும் கடுமையாக எதிர்க்கிறார்.
``ஒரு குழந்தை ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை பள்ளிக்கூடத்தில் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே இருக்கிறது. அதன்பின்னர், எதற்கு வீட்டுப் பாடம்? வீட்டிற்கு வந்த பின்னரும் அதையே தொடர வேண்டிய அவசியம் என்ன? ஸ்கூலில் படிக்கவேண்டும். வீட்டில் பெற்றோர்களுடனும் மற்ற உறவினர்களுடனும் கலந்திருக்க வேண்டும். வீட்டிலும் படித்துக்கொண்டே இருந்தால் எப்படி? நம்ம ஊர் படிப்பில் எல்லாமே பரீட்சையை வைத்துத் தான் முடிவு செய்கிறார்கள். அதனால் குழந்தையின் இயல்பு நிலை மாறி, தூக்கத்திலும் `டீச்சர்' திட்டுவாங்களே என்கிற மனஉளைச்சலுக்குத் தள்ளப்படும். வருடம் முழுவதும் படித்துவிட்டு, முடிவில் ஒரே ஒருநாள் எழுதும் பரீட்சையின் மூலம் மட்டும் குழந்தையின் ஆளுமைத் திறனை எப்படி கணிக்க முடியும்? பரீட்சையின் போது, சொந்தமாக எந்தக் கருத்தையும் எழுதிவிட முடியாது. புத்தகத்தில் இல்லாததை எப்படி எழுதலாம் எனக் கேட்டு, மதிப்பெண்கள் குறைக்கப்படும். ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் இந்தப் பிரச்னை இல்லை.
நான் அமெரிக்காவில் படித்துக்கொண்டிருந்தபோது, இயற்பியல் பரீட்சையில் ஒரு கேள்வி. `குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்டில் மக்கள் `காமா கதிர்களை'க் கொண்டு எப்படி உணவைப் பதப்படுத்துவார்கள்?' `குளிர்சாதனப் பெட்டியைப் பற்றியே தெரியாத நாட்டில் `காமா கதிர்கள்' பற்றித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை!' என்று பதில் எழுதினேன். புத்தகத்தில் இப்படி ஒரு விடை கிடையாது. நானாகவே எழுதினேன். ஆனால் அதற்கு மதிப்பெண் கொடுத்து என்னைப் பாராட்டினார்கள். இதுதான் நமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்.
படிப்பது, பரீட்சை எழுதுவதற்கு மட்டுமே என்கிற நமது கல்வி முறை மாறவேண்டும். எதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோமோ, அதைப் பற்றிய அடிப்படைத் தகவல்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. `நான் சொல்வதைப் படித்தால் போதும்?' என்று ஓங்கி அடித்து உட்கார வைத்துவிடுகிறார்கள். அப்புறம் எப்படிக் கேள்விகள் பிறக்கும்?
வளர்ந்த நாடுகளில் குழந்தைகள், மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் எதையும் திணித்துவிட முடியாது. ஏன்? எதற்கு? என்கிற கேள்விகள் இல்லாமல் அங்கே ஒரு வகுப்பு கூட நிறைவடையாது!'' என சற்றே குரல் உயர்த்திச் சொல்லும் கார்த்தி, உடற்கல்வி பற்றியும் நிறையப் பேசுகிறார்.
``சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லை. அப்படியே விளையாடினாலும் பெற்றோரும், ஆசிரியர்களும் தடை போடறாங்க. குடும்பமாக எங்காவது போய் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும் பழக்கம் இன்னிக்கு இல்ல. ஆனா குடும்பமா ஒண்ணாச் சேர்ந்து டி.வி. பார்க்கறாங்க. ஹோட்டலுக்குப் போறாங்க. விளையாடும்போது உடலும், மனமும் இலகுவடையும். சோர்வு விலகும். அடுத்து என்ன செய்யலாம்ங்கிற உத்வேகம் உண்டாகும். குழந்தைகளின் கல்விக்கு விளையாட்டுதானே அடிப்படை!'' என்கிறார்.
தந்தையின் கருத்துக்களை ஆதரிப்பதுபோல் அவரது கரங்களைப் பிடித்துக் குலுக்கும் மூன்றாவது படிக்கும் மகள் அதிதி நளினி சிதம்பரத்தை வாஞ்சையோடு அணைத்துக்கொள்கிறார் கார்த்தி!.

Wednesday 1 October 2008

பவானி கூடுதுறை படங்கள்

கீழ உள்ள லிங்க் இ சொடுக்கி பவானி கூடுதுறை படங்கள் பார்க்கவும் .
http://konguvaasal.blogspot.com/search/label/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88

கடமை-வேதாத்திரி மகரிஷி சிந்தனைகள்-1

நாம் இந்த உலகத்திற்கு வந்தோம். ஒரு நாள் இதைவிட்டுப் போகப் போகிறோம். இந்தப் பூமியில் நம்முடன் எதுவும் கொண்டு வரவில்லை. நாம் புறப்படும் பொழுது எதுவும் எடுத்துச் செல்ல முடியாது. ஒவ்வொருவருடைய தன்மைக்கேற்ப சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை ஏற்படுகிறது. ஒவ்வொரு செயலிலும் எந்த அளவு நன்மை செய்ய முடியும் என்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்.

உங்கள் மனதைக் கடமையில் செலுத்துங்கள். உங்கள் முயற்சிக்கு அப்பால் எது நடந்தாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளுங்கள். அதுதான் இயற்கைச் சட்டம். நாம் பிறப்பதற்கு முன்பே அந்த ஆற்றல் இருந்து கொண்டிருக்கிறது. நாம் இறந்த பின்பும் அந்தப் பேராற்றல் இருந்து கொண்டிருக்கும். இதில் நாம் கவலைப்படுவதில் என்ன இருக்கிறது. கவலையே கவலைப்படுவதற்கு விட்டுவிடுங்கள்! நாம் வாழும் காலத்தில் நமக்காகவும், சமுதாயத்திற்காகவும் ஆற்ற வேண்டிய பொறுப்புக்களைப் பெற்றிருக்கிறோம். அவற்றை நன்குணர்ந்து நல்ல முறையில் நமக்கும், மற்றவர்களுக்கும் திருப்தி தரும் வகையில் நம் கடமைகளைச் செய்ய வேண்டும். அதன் பிறகு மனம் அமைதியடையும். உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய வகையில் புதுப்பிரச்சினைகள் மேலும் ஏற்படுத்தாத வகையில் பேராற்றல் பெற்று உங்கள் மனம் சிறந்து விளங்கும்.