Thursday 18 December 2008

♥ : இதை படிக்காதீர்கள்




" உலக வரலாறுலஎன்ன நீங்க படிக்கிறீங்க.. ஒரு இனத்தை ஒரு நாட்டை அழிக்கனுமா?..
 
ராணுவம் வேண்டாம்,குதிரை படை வேண்டாம்,யானைப்படை  வேண்டாம்,வில்லம்பு ஈட்டி வேண்டாம்,குண்டு வீசவேண்டாம், துப்பாக்கியெடுத்து சுட வேண்டாம், ஒரு உயிரைக்கொள்ள வேண்டாம், ஒரு துளி இரத்தம் இந்த மண்ணில் சிந்த வேண்டாம்..
பிறகெப்படி நாட்டை அழிப்பது.. அழிக்கலாம்: எளிது.
 
அவன் மொழியை அழித்துவிடு.!!
மொழியை அழித்துவிட்டால்... பன்பாடு கலாச்சாரம் வீழும், இணம் வீழும், நாடு அழியும்.!!
 
இதுதானே வரலாறு..

சொந்த மொழியை கற்காமல்,பேசாமல்,படிக்காமல் உலக வரலாற்றில் எந்த இனமும் வாழ்ந்ததாக சரித்திரமில்லை..

சொந்த மொழியினை முதலில் கற்றுத்தெளி.
பிறகு எந்த மொழியையும் படி.. எல்லா மொழியையும் படி.. வேண்டாமென்று சொல்லவில்லை.

உங்கள் வீடுகளுக்கு எத்தனை ஜன்னல்கள் தேவையோ.. அத்தனை ஜன்னல்களாக நீங்கள் உலக மொழிகளை வைத்துக்கொள்ளுஙள்.
நுழைவாசலாக இருக்கிற, "தலைவாசலாக" தமிழ் இருக்கட்டும்.

 
சமைக்கிற அரிசியில் இருக்கிற கல்லை எடுத்துப்பொறுக்கி தூரப்போடும் என் இனமே..  அதைபோன்று உன் உயிருக்கு நிகரான மொழியில் கலந்திருக்கும் பிற சொல்லை நீ நீக்கவேண்டாமா?"

என் மொழியை நான் பேசாமல், வேறெந்த நாய் பேசும் என்று ஒரு ஆதங்கம் நமக்குள் ஏற்பட்டால்.. எளிதாய் வென்றுவிடலாம்."
-
(இயக்குனர் அண்னன் சீமான் நேர்காணலிரிருந்து.)

'
இஸ்ரேல்' நாட்டை உருவாக்கும் முன் யூதர்கள் செய்த  காரியம் சிதைந்து  போன அவர்கள் 'ஹீப்ரு' மொழியை காப்பற்றியது தான்.

ஆங்கிலம் என்பது மொழி மட்டுமே.
ஆனால் தமிழ் என்பது 'அறிவு', மேலும் அதுவே நம் 'அடையாளம்' .
நாம் "அடையாளம்" இல்லாமல்  வாழக்கூடாது .!!

 

 

-------------
"
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு.!"