என் மன அமைப்பின்படி எனக்கு எப்போதும் எதிலும் பூரண நம்பிக்கை வந்தது இல்லை. எங்கும் தர்க்கமே முன்னிட்டு நிற்பதனால் ஒன்றை நம்பி ஏற்பது என்பது எனக்குச் சாத்தியமில்லாததாகவே உள்ளது. என் நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை நான் கடவுளை வழிபட்டதில்லை. பிரார்த்தனைகள் செய்ததோ வழிபாடுகள் ஆற்றியதோ இல்லை. இந்த நிமிடம் வரை எனக்கோ குழந்தைகளுக்கோ எவ்வித மதச்சடங்குகளும் செய்து கொண்டதும் இல்லை. இறந்துபோன என் பெற்றோருக்கான நீத்தார் கடன்களைக்கூட அதில் நம்பிக்கை இல்லை என்ற காரணத்தால் நான் செய்யவில்லை. இந்து மதத்தின் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, பலநூறு சிறுதெய்வங்கள், குலதெய்வங்கள் எதிலும் எனக்கு சற்றும் நம்பிக்கை இல்லை. என்னைப் பொருத்தவரை நான் நம்பாத எதையும் செய்வதும் இல்லை.
---ஜெயமோகன் கூறியது
Wednesday 23 July 2008
Subscribe to:
Posts (Atom)